நீச்சல் நினைவுகள்...
எங்கள் பகுதியில் சொரக்கா (சுரைக்காய்) புருடையைச் சுற்றிக் கயிறு வரிந்து அதை இடுப்போடு கட்டிக்கொள்வோம்... அது ஒரு மாட்டையே மிதக்கவைத்துவிடும்... ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வரையும் கூட எங்கள் ஊரில் எல்லார் வீட்டிலும் ஒரு சுரைப்புருடையாவது இருந்தது... இன்று அப்படியில்லை...
எனக்கு 8 வயதானபோது வந்த கோடைக்கால விடுமுறையில் சில அண்ணன்மார்கள் ஊரிலிருக்கும் அத்தனை பொடுசுகளையும் இருப்பதிலேயே பெரிய கிணற்றுக்குக் கூட்டிப்போய் பழக்கிவிட்டார்கள்... மூன்றாம் நாளிலிருந்து பசங்களுக்கு சொரப்புருடை கிடையாது... அப்போது என் அம்மச்சியும் சித்தியும் இன்னும் பல மத்திய வயது பெண்களும் பாட்டிமார்களும்கூட எங்களுடன் நீச்சலடித்தார்கள்... எங்கள் பெண்களைப்பார்த்து ஆச்சரியப்பட்ட தருணமது... சொரப்புருடையைக் கட்டிக்கொண்டு குதிக்க சொன்னார்கள்... பயம் தொற்றிக்கொண்டது... அம்மச்சி உடனே எனக்கு தைரியம் குடுக்க அவர் நீச்சல் கற்றுக்கொண்ட கதையைச் சொன்னார், அதாவது அவரது சிறு வயதில் ஆட்டுக்குட்டி ஒன்று கிணற்றில் விழுந்துவிட அதைக்காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தபோது கற்றுக்கொண்டேன் என்றார்... இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு அண்ணன் பின்னாலிருந்து தள்ளிவிட்டார்... வீலென்று கத்தியபடி பண்டைய தமிழர் மரபில் வந்த வீரனாக தண்ணீருக்கு நெஞ்சைக் காட்டியபடி விழுந்தேன்... என்னா அடி, கழுத்திலிருந்து தொடை வரை சிவப்பாகிவிட்டது... நல்லவேலை புருடை கட்டியிருந்ததால் நீருக்குள் அமிழ்ந்துவிடவில்லை...
சற்று வளர்ந்த பிறகு கிணற்றில் விளையாடும் போது வாழை மரங்களை வெட்டிப்போட்டு அதன் மேலமர்ந்து படகோட்டுவது போல் விளையாடியும், கை ஓயும் நேரங்களில் அதைப்பிடித்தபடி மிதந்தபடியுமிருப்போம்... அதன் பிறகு அதிக நேரம் கைகால்களை ஆட்டாமல் மிதப்பது, தண்ணீருக்குள் தொட்டுப்பிடித்து விளையாடுவது, பந்து வீசி விளையாடுவது, அதிக நேரம் யார் முக்குளிப்பது, சொருலடித்து அந்த விசையிலேயே அதிகநேரம் யார் கையசைக்காமல் போகிறார்கள் என்று பார்ப்பது எனப் பல விளையாட்டுக்கள்... சில அண்ணன்களும் மாமன்களும் அருகிலிருக்கும் தென்னையிலேறி அதன் உச்சியிலிருந்து குதிப்பார்கள், அவர்களிடையே யார் அதிக நேரம் சுரைப்புருடையை நிருக்குள் பிடித்துக்கொண்டு முக்குளிப்பது, யார் மின்சாரத்தில் இயங்கும் நீரேற்றியின் (electric pump) அடிக்குழாயின் வாயில் முதல் ஆளாகப்போய் சுரைப்புருடையைக் கட்டிவைத்து வருவது, யார் முதலில் அதைப்போய் அவிழ்த்து வருவது என அதிபராக்கிரம போட்டிகள் நடக்கும்... அந்த வேகமும், பலமும் வீரமும் எனது தலைமுறையில் சற்று குறைந்து இன்றைய அதிநவீன தலைமுறையில் இன்னும் குறைந்துவிட்டது... நாச்சலடிக்கத் தெரியாதவர்களைக் கடப்பாரை நீச்சல்காரன் என்று கேலிபேசுவோம்... மஞ்சள் நீராட்டங்களின் போதெல்லாம் அந்த பெரிய கிணற்றில் ஊரிலிருக்கும் வாலிபர்களும் பொடுசுகளும் இறங்கி கிணற்றை கலங்கடித்துவிடுவார்கள்...
இப்பொழுதும் எங்கள் தோட்டக்கிணறில் தண்ணீர் படித்துறைக்கு அருகிலிருக்கும் போது நான் வீட்டிலிருக்கும் போதெல்லாம் நீச்சலடிப்பது வழக்கம்... இனி என் அக்காள் மகளுக்கு பழக்கவேண்டும்... இப்போதே மாமா நானும் உங்கள மாதிரி மீச்சலடிப்பேன் என்னையும் கிணற்றுக்கு கூட்டிப்போங்கள் என்கிறாள்... அவள் மழலை மீச்சல் நீச்சலானவுடன் பழக்க ஆரம்பிக்கவேண்டும்... புருடையை வரிந்து கொடுப்போரைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்...
எங்கள் பகுதியில் சொரக்கா (சுரைக்காய்) புருடையைச் சுற்றிக் கயிறு வரிந்து அதை இடுப்போடு கட்டிக்கொள்வோம்... அது ஒரு மாட்டையே மிதக்கவைத்துவிடும்... ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வரையும் கூட எங்கள் ஊரில் எல்லார் வீட்டிலும் ஒரு சுரைப்புருடையாவது இருந்தது... இன்று அப்படியில்லை...
எனக்கு 8 வயதானபோது வந்த கோடைக்கால விடுமுறையில் சில அண்ணன்மார்கள் ஊரிலிருக்கும் அத்தனை பொடுசுகளையும் இருப்பதிலேயே பெரிய கிணற்றுக்குக் கூட்டிப்போய் பழக்கிவிட்டார்கள்... மூன்றாம் நாளிலிருந்து பசங்களுக்கு சொரப்புருடை கிடையாது... அப்போது என் அம்மச்சியும் சித்தியும் இன்னும் பல மத்திய வயது பெண்களும் பாட்டிமார்களும்கூட எங்களுடன் நீச்சலடித்தார்கள்... எங்கள் பெண்களைப்பார்த்து ஆச்சரியப்பட்ட தருணமது... சொரப்புருடையைக் கட்டிக்கொண்டு குதிக்க சொன்னார்கள்... பயம் தொற்றிக்கொண்டது... அம்மச்சி உடனே எனக்கு தைரியம் குடுக்க அவர் நீச்சல் கற்றுக்கொண்ட கதையைச் சொன்னார், அதாவது அவரது சிறு வயதில் ஆட்டுக்குட்டி ஒன்று கிணற்றில் விழுந்துவிட அதைக்காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தபோது கற்றுக்கொண்டேன் என்றார்... இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு அண்ணன் பின்னாலிருந்து தள்ளிவிட்டார்... வீலென்று கத்தியபடி பண்டைய தமிழர் மரபில் வந்த வீரனாக தண்ணீருக்கு நெஞ்சைக் காட்டியபடி விழுந்தேன்... என்னா அடி, கழுத்திலிருந்து தொடை வரை சிவப்பாகிவிட்டது... நல்லவேலை புருடை கட்டியிருந்ததால் நீருக்குள் அமிழ்ந்துவிடவில்லை...
சற்று வளர்ந்த பிறகு கிணற்றில் விளையாடும் போது வாழை மரங்களை வெட்டிப்போட்டு அதன் மேலமர்ந்து படகோட்டுவது போல் விளையாடியும், கை ஓயும் நேரங்களில் அதைப்பிடித்தபடி மிதந்தபடியுமிருப்போம்... அதன் பிறகு அதிக நேரம் கைகால்களை ஆட்டாமல் மிதப்பது, தண்ணீருக்குள் தொட்டுப்பிடித்து விளையாடுவது, பந்து வீசி விளையாடுவது, அதிக நேரம் யார் முக்குளிப்பது, சொருலடித்து அந்த விசையிலேயே அதிகநேரம் யார் கையசைக்காமல் போகிறார்கள் என்று பார்ப்பது எனப் பல விளையாட்டுக்கள்... சில அண்ணன்களும் மாமன்களும் அருகிலிருக்கும் தென்னையிலேறி அதன் உச்சியிலிருந்து குதிப்பார்கள், அவர்களிடையே யார் அதிக நேரம் சுரைப்புருடையை நிருக்குள் பிடித்துக்கொண்டு முக்குளிப்பது, யார் மின்சாரத்தில் இயங்கும் நீரேற்றியின் (electric pump) அடிக்குழாயின் வாயில் முதல் ஆளாகப்போய் சுரைப்புருடையைக் கட்டிவைத்து வருவது, யார் முதலில் அதைப்போய் அவிழ்த்து வருவது என அதிபராக்கிரம போட்டிகள் நடக்கும்... அந்த வேகமும், பலமும் வீரமும் எனது தலைமுறையில் சற்று குறைந்து இன்றைய அதிநவீன தலைமுறையில் இன்னும் குறைந்துவிட்டது... நாச்சலடிக்கத் தெரியாதவர்களைக் கடப்பாரை நீச்சல்காரன் என்று கேலிபேசுவோம்... மஞ்சள் நீராட்டங்களின் போதெல்லாம் அந்த பெரிய கிணற்றில் ஊரிலிருக்கும் வாலிபர்களும் பொடுசுகளும் இறங்கி கிணற்றை கலங்கடித்துவிடுவார்கள்...
இப்பொழுதும் எங்கள் தோட்டக்கிணறில் தண்ணீர் படித்துறைக்கு அருகிலிருக்கும் போது நான் வீட்டிலிருக்கும் போதெல்லாம் நீச்சலடிப்பது வழக்கம்... இனி என் அக்காள் மகளுக்கு பழக்கவேண்டும்... இப்போதே மாமா நானும் உங்கள மாதிரி மீச்சலடிப்பேன் என்னையும் கிணற்றுக்கு கூட்டிப்போங்கள் என்கிறாள்... அவள் மழலை மீச்சல் நீச்சலானவுடன் பழக்க ஆரம்பிக்கவேண்டும்... புருடையை வரிந்து கொடுப்போரைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்...
No comments:
Post a Comment