Tuesday, 22 April 2014

காதல் மயக்கத்தில் நானும், செம கடுப்பில் எனது மனசாட்சியும்...

காதல் மயக்கத்தில் நானும், செம கடுப்பில் எனது மனசாட்சியும்...

இருவருக்குமான (எனக்குள்ளான ) உரையாடலில்

நான் : ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன் நிலவில் ஒளியில்லை,

மனசாட்சி : (பாட்டே தப்பு என்று தலையிலடித்துக்கொண்டு) ஙே, இன்னைக்கு அமாவாசை அப்படித்தான் இருக்கும்!!!

நான் : நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன், என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்!! 

மனசாட்சி : டேய், நின்னையா இல்ல ஓடி வந்தியா?? ஏன்டா காதல் வந்தா இப்படி ஏதாச்சும் ஒளருவீங்களா... இப்படியே பாடிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காத... பைத்தியகாரன கண்டா கல்லெடுத்து அடிக்கிறாங்களாம்...

நான் : (மனசாட்சி கடுப்பேற்றியதால் விரக்தியாகி)
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனசாட்சியென்று யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்   

மனசாட்சி : (சாமியார் மடம் ஒன்றைக் காட்டி) டேய் சட்டித்தலையா, இப்படியே காதல் அது இதுனு சுத்திட்டு இருந்தீயனா, கூடிய சீக்கிரம் அங்கதான் போகனும்...

நான் : ?(

No comments:

Post a Comment