பெண்களின் அடக்கத்தில் தான் ஒரு குடும்பத்தின், சமுதாயத்தின் கவுரவம் கட்டப்பட்டிருக்கிறதா??
பெண் என்பவள் என்று ஒரு சக மனிதராக, தனக்கென ஒரு வாழ்வியல் சுதந்திரம் கொண்ட மனிதராக வாழ முடிகிறதோ, அப்பொழுது தான் ஒரு சமுதாயம் உண்மையில் முன்னேறும் சமுதாயமாக மாறும்...
ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வேலைக்குப் போவதே ஒரு பெரும் எல்லை மீறலாக இருந்தது.. ஆனால் இன்று பல துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்...
நான் சம்பாதிப்பதைப் பற்றிப் பேசும் பொழுது, பெண்களை சம்பாதிக்க அனுப்பும் நாம், அவர்களின் பணம் வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் அவர்களின் சுய சிந்தனை என்று வரும் பொழுது மட்டும், ஏதோ ஒரு மிகப்பெரும் பாவச் செயலை அவர்கள் செய்வதாகப் பதறுகிறோம்???
அவர்கள் புகைபிடித்தால் உடனே அதை புகைப்படம் எடுத்து, அந்த படத்திர்க்கு "குடும்பக் குத்துவிலக்குகள்" என்று தலைப்பிட்டு அதை பகிர்ந்துகொள்கிறோம்... அதே ரஜினி ஒரு படத்தில் சுருட்டை தூக்கி வீசி நிபுணமாக வாயில் கவ்வினால் அதைக் கைதட்டி கொண்டாடுகிறோம்...
பெண்கள் தன்னியடித்தால் அவ்வளவுதான்...
பெண்கள் சில பசங்களுடன் சிரித்துப் பேசினால்?? அவ்வளவுதான், சொல்லப்படும் வார்த்தைகளை அச்சிலேற்ற முடியாது...
ஒரு ஆண் திருமனம் செய்ய மறுத்தாலோ அல்லது தான் கொண்ட ஏதேனும் கடமையை முடிக்க வேண்டி சில காலம் திருமனம் வேண்டாம் என்றாலோ அதை மெச்சிக் கொண்டாடும் நாம், ஏனொரு பெண் திருமனத்தை வேண்டாம் என்றாலோ, அல்லது சில காலம் அவகாசம் கேட்டாலோ உடனே, அவர்களுக்கு ஆயிரம் உபதேசங்களைக் கொட்டிக் குடுக்கிறோம்???
அதென்ன பெண்கள் திருமனத்திற்க்குப் பிறகு ஆண்களுக்கு சமையல்காரிகளா?? அவர்கள் வேலைக்குப் போனால், உடனே கனவன் பட்டினி கிடப்பதாகவும், இவர்கள் ஏதோ ஊர் சுற்றுவதாகவும் கற்பனைகள் குதிரையேறி விடும்... அதில் ஆண்களுக்கு பிரச்சினை வருகிறதோ இல்லையோ, அவனது அம்மாவுக்கோ, சகோதரிகளுக்கோ ஆயிரம் பிரச்சினைகள் வந்து விடுகிறது???
ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் விருப்பத்திற்க்கு அவளைப் போன்ற இன்னொரு பெண் துனை நின்றாலே, பாதித் தொல்லை முடிந்துவிடும். ஆனால் பெண்களுக்குள் என்னதான் பிரச்சினை என்று எனக்கும் தெரியவில்லை, பல நேரங்களில் பெண்களுக்குகும் புரட்சிக்கும் குறுக்கே இன்னொரு பெண் தான் நிற்பதாக நான் நினைக்கிறேன்...
பெண் என்பவள் என்று ஒரு சக மனிதராக, தனக்கென ஒரு வாழ்வியல் சுதந்திரம் கொண்ட மனிதராக வாழ முடிகிறதோ, அப்பொழுது தான் ஒரு சமுதாயம் உண்மையில் முன்னேறும் சமுதாயமாக மாறும்...
ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வேலைக்குப் போவதே ஒரு பெரும் எல்லை மீறலாக இருந்தது.. ஆனால் இன்று பல துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்...
நான் சம்பாதிப்பதைப் பற்றிப் பேசும் பொழுது, பெண்களை சம்பாதிக்க அனுப்பும் நாம், அவர்களின் பணம் வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் அவர்களின் சுய சிந்தனை என்று வரும் பொழுது மட்டும், ஏதோ ஒரு மிகப்பெரும் பாவச் செயலை அவர்கள் செய்வதாகப் பதறுகிறோம்???
அவர்கள் புகைபிடித்தால் உடனே அதை புகைப்படம் எடுத்து, அந்த படத்திர்க்கு "குடும்பக் குத்துவிலக்குகள்" என்று தலைப்பிட்டு அதை பகிர்ந்துகொள்கிறோம்... அதே ரஜினி ஒரு படத்தில் சுருட்டை தூக்கி வீசி நிபுணமாக வாயில் கவ்வினால் அதைக் கைதட்டி கொண்டாடுகிறோம்...
பெண்கள் தன்னியடித்தால் அவ்வளவுதான்...
பெண்கள் சில பசங்களுடன் சிரித்துப் பேசினால்?? அவ்வளவுதான், சொல்லப்படும் வார்த்தைகளை அச்சிலேற்ற முடியாது...
ஒரு ஆண் திருமனம் செய்ய மறுத்தாலோ அல்லது தான் கொண்ட ஏதேனும் கடமையை முடிக்க வேண்டி சில காலம் திருமனம் வேண்டாம் என்றாலோ அதை மெச்சிக் கொண்டாடும் நாம், ஏனொரு பெண் திருமனத்தை வேண்டாம் என்றாலோ, அல்லது சில காலம் அவகாசம் கேட்டாலோ உடனே, அவர்களுக்கு ஆயிரம் உபதேசங்களைக் கொட்டிக் குடுக்கிறோம்???
அதென்ன பெண்கள் திருமனத்திற்க்குப் பிறகு ஆண்களுக்கு சமையல்காரிகளா?? அவர்கள் வேலைக்குப் போனால், உடனே கனவன் பட்டினி கிடப்பதாகவும், இவர்கள் ஏதோ ஊர் சுற்றுவதாகவும் கற்பனைகள் குதிரையேறி விடும்... அதில் ஆண்களுக்கு பிரச்சினை வருகிறதோ இல்லையோ, அவனது அம்மாவுக்கோ, சகோதரிகளுக்கோ ஆயிரம் பிரச்சினைகள் வந்து விடுகிறது???
ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் விருப்பத்திற்க்கு அவளைப் போன்ற இன்னொரு பெண் துனை நின்றாலே, பாதித் தொல்லை முடிந்துவிடும். ஆனால் பெண்களுக்குள் என்னதான் பிரச்சினை என்று எனக்கும் தெரியவில்லை, பல நேரங்களில் பெண்களுக்குகும் புரட்சிக்கும் குறுக்கே இன்னொரு பெண் தான் நிற்பதாக நான் நினைக்கிறேன்...
No comments:
Post a Comment