யாருக்கு வாக்களிப்பது என்று குழம்பிக்கொண்டான்...
வேட்பாளர் பெயர் மட்டும் தெரிந்தது...
ராத்திரி தலைக்கேறிய போதையில் சின்னத்தை இழந்துவிட்டான்...
தேர்தலதிகாரி சீக்கிரமன்று உசுப்ப,
மீண்டும் படித்துப்பார்த்தான்...
நான்கு குழந்தைசாமிகள் பட்டியலிலிருந்தார்கள்...
வேட்பாளரின் அல்லைக்கைகளை மட்டுமே பார்த்ததால் வேட்பாளர் முகமும் பரிட்சயமில்லை...
மீண்டும் பார்க்கும்போது ஒரு கந்தசாமியும் இருப்பது தெரிந்தது...
பிள்ளைமேல் கையடித்துச் சத்தியம் செய்தாயிற்று,
ஆத்தா கோபம் கொண்டால் என்னாவது??
கந்தசாமி... யாரிந்த கந்தசாமி?
பார்த்திருக்கிறான்...
அவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்துப்போய் பாடம் சொல்லிக்குடுப்பார்...
பெண்களுக்கு சிக்கனத்தையும், சுய உதவிக்குழுக்களாக இனைந்து அவர்களது வாழ்க்கையை வடிவமைக்க உதவிசெய்வார்...
குடிக்கு அடிமையான தன்னிடமே, சாராயம் குடிக்காதப்பா, அந்தக் காசுல வீட்டுக்கு பால் வாங்கிப்போ, குழந்தை தெம்பா வளரும்... வீட்டம்மாகிட்ட மிச்சப்பணத்தக்குடு.... குழந்தைய நல்லாப்படிக்க வை என்று அவனது போதைக்குப் புரியாததையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்...
அவர் பிரச்சாரத்திற்கு வந்தபோது குழந்தைசாமியின் அடியாள் சாராயத்தை ஊத்திக்குடுத்து அவர்மீது தன்னை ஏவிவிட்டதும் நியாபகம் வந்தது...
போதையில் அவர் மீது கல்லெடுத்து எறிந்ததும், அது அவரது தலையை பிளந்து ரத்தம் வரவைத்ததும், தன்னுடன் வந்த யாரோ ஒருவர் வீசிய கல் கூட்டத்திலிருந்த ஒரு குழந்தையை தாக்கியதும், அந்த கந்தசாமி தன் மண்டையில் வழியும் ரத்தத்தைத் துடைக்காமல் அந்த குழந்தையை காப்பாற்ற ஓடியதும் நினைவுவந்தது...
காலையில் தன் குழந்தை தலையில் கட்டுடன் வீட்டில் படுத்திருப்பதம், பெண்கள் பலரும் அவனைச் சபிப்பதையும் அரை போதையில் கேட்டுக்கொண்டே அடுத்த சுத்து தேர்தல் சாராயத்துக்கு போய்விட்டதும் நியாபகம் வந்தது...
இதெல்லாம் நியாபகம் வர, யோவ், கணாக்கண்டது போதும்... உன் நேரம் முடியப்போகுது... சீக்கிரம் பட்டன அமுக்கு என்று தேர்தல் அதிகாரி அவசரப்படுத்த, நடுங்கிய கையால் கந்தசாமியின் எதிரிலிருந்த விசையை அமுக்கினான்...
வெளியில் வந்தபோது குழந்தைசாமியின் அல்லக்கையான காவேந்தன் அவனைப்பார்த்து கட்டை விரலை உயர்த்திக்காட்ட, ஆத்தாவின் கோபம் நியாபகத்துக்கு வந்தது... தலைவலியுடன் வீட்டுக்கு வந்து தலையில் கட்டுடன் தன் குழந்தை படுத்திருப்பதைப் பார்த்தபோது, கந்தசாமி நியாபகத்திற்கு வந்தார்...
வேட்பாளர் பெயர் மட்டும் தெரிந்தது...
ராத்திரி தலைக்கேறிய போதையில் சின்னத்தை இழந்துவிட்டான்...
தேர்தலதிகாரி சீக்கிரமன்று உசுப்ப,
மீண்டும் படித்துப்பார்த்தான்...
நான்கு குழந்தைசாமிகள் பட்டியலிலிருந்தார்கள்...
வேட்பாளரின் அல்லைக்கைகளை மட்டுமே பார்த்ததால் வேட்பாளர் முகமும் பரிட்சயமில்லை...
மீண்டும் பார்க்கும்போது ஒரு கந்தசாமியும் இருப்பது தெரிந்தது...
பிள்ளைமேல் கையடித்துச் சத்தியம் செய்தாயிற்று,
ஆத்தா கோபம் கொண்டால் என்னாவது??
கந்தசாமி... யாரிந்த கந்தசாமி?
பார்த்திருக்கிறான்...
அவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்துப்போய் பாடம் சொல்லிக்குடுப்பார்...
பெண்களுக்கு சிக்கனத்தையும், சுய உதவிக்குழுக்களாக இனைந்து அவர்களது வாழ்க்கையை வடிவமைக்க உதவிசெய்வார்...
குடிக்கு அடிமையான தன்னிடமே, சாராயம் குடிக்காதப்பா, அந்தக் காசுல வீட்டுக்கு பால் வாங்கிப்போ, குழந்தை தெம்பா வளரும்... வீட்டம்மாகிட்ட மிச்சப்பணத்தக்குடு.... குழந்தைய நல்லாப்படிக்க வை என்று அவனது போதைக்குப் புரியாததையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்...
அவர் பிரச்சாரத்திற்கு வந்தபோது குழந்தைசாமியின் அடியாள் சாராயத்தை ஊத்திக்குடுத்து அவர்மீது தன்னை ஏவிவிட்டதும் நியாபகம் வந்தது...
போதையில் அவர் மீது கல்லெடுத்து எறிந்ததும், அது அவரது தலையை பிளந்து ரத்தம் வரவைத்ததும், தன்னுடன் வந்த யாரோ ஒருவர் வீசிய கல் கூட்டத்திலிருந்த ஒரு குழந்தையை தாக்கியதும், அந்த கந்தசாமி தன் மண்டையில் வழியும் ரத்தத்தைத் துடைக்காமல் அந்த குழந்தையை காப்பாற்ற ஓடியதும் நினைவுவந்தது...
காலையில் தன் குழந்தை தலையில் கட்டுடன் வீட்டில் படுத்திருப்பதம், பெண்கள் பலரும் அவனைச் சபிப்பதையும் அரை போதையில் கேட்டுக்கொண்டே அடுத்த சுத்து தேர்தல் சாராயத்துக்கு போய்விட்டதும் நியாபகம் வந்தது...
இதெல்லாம் நியாபகம் வர, யோவ், கணாக்கண்டது போதும்... உன் நேரம் முடியப்போகுது... சீக்கிரம் பட்டன அமுக்கு என்று தேர்தல் அதிகாரி அவசரப்படுத்த, நடுங்கிய கையால் கந்தசாமியின் எதிரிலிருந்த விசையை அமுக்கினான்...
வெளியில் வந்தபோது குழந்தைசாமியின் அல்லக்கையான காவேந்தன் அவனைப்பார்த்து கட்டை விரலை உயர்த்திக்காட்ட, ஆத்தாவின் கோபம் நியாபகத்துக்கு வந்தது... தலைவலியுடன் வீட்டுக்கு வந்து தலையில் கட்டுடன் தன் குழந்தை படுத்திருப்பதைப் பார்த்தபோது, கந்தசாமி நியாபகத்திற்கு வந்தார்...
No comments:
Post a Comment