Friday, 18 April 2014

பெண்ணியமும் குடும்பமும்-2

//1. குடும்பம், கலாச்சாரம், மதம் இவற்றின் மூலம் சமூகம் பெண்ணின் மீது (மட்டுமே) திணிக்கும் கட்டுப்பாடுகள், கொள்கை முரண்கள் //

இதற்கான பதில், சமுதாயத்தின் பாதுகாப்பற்ற சூழல் தான் காரனம். பெண்கள் கடத்தப்பட, வன்புணர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் இந்த கட்டுப்பாடுகள். மேலும் வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போதும், நமது சமுதாயம் சற்றேறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு அன்னியப் படையெடுப்புகள், அன்னிய ஆக்கிரமிப்பு, நமது சமூகக் கட்டமைப்புகளின் மீதான தாக்குதல், என ஒரு நிலையான ஆட்சி அமைப்பற்ற சூழல் நிலவியது. இதனால்தான் கட்டுகள் அற்ற தமிழ்ப் பெண்ணினம் ஒரு கட்டுக்குள் வைக்கப் பட்டது என்பது என் கருத்து.

இன்றைய சூழலில் கூட ஒரு பெண்ணால் தனியாக பல இடங்களுக்குச் செல்ல முடியாது. அப்படியிருக்கும் போது, நம்மைப் போர்களத்தில் வென்ற அன்னியப் படைகள், கைகளில் ஆயுத்ததோடும் கட்டற்ற அதிகாரத்தோடும் பல நூற்றாண்டுகள் நம்மிடையே திரிந்த போது பெண்களின் பாதுகாப்பின்மையை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அதனால்தான் நமது குடும்பங்கள் பெண்களைப் மறைத்து வைத்தே வளர்க்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கும்.

நமது சமூகம் மாறிவருகிறது, பொதுவெளிகளில் பாதுகாப்பு அதிகரிக்கிறது. இன்று பல குடும்பங்கள் தங்கள் பெண்களை தனியாக பயணம் செய்யவும், பிற ஆண்களின் மத்தியில் தொழில் செய்யவும் அனுமதிக்கின்றன. நமது குடும்பங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் குடுப்பது சமுதாயம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதைப் பொருத்தே. பல வீடுகளில் இன்று ஆண் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கிறது, காரனம், ஆண்பிள்ளைகள் தவறான வழிகளில் செல்வதற்கான வாய்ப்பு இன்றைய சூழலில் அதிகம்.

குருட்டுத்தனமாக குடும்பங்களைக் குறைகூறுவது அநியாயம். நாம்தான் குடும்பம்.

மேலும் தமிழகத்தில் இன்று பெண்ணியவாதகள் என்று சொல்லித் திரிபவர்களில் பலர் பெண்களுக்கு பலதார சுதந்திரம், ஓரினச்சேர்கை சுதந்திரம், குடிப்பதற்கான சுதந்திரம், புகைப்பிடித்தலுக்கான சுதந்திரம் எனத் தனிமனித சீர்கேடுகளைத்தான் தேவையான சுதந்திரம் என முன்வைக்கிறார்கள். புரிதலற்ற பெண்கள் இந்த நச்சுகளின் பேச்சுகளைத் தப்பாகப் புரிந்துகொண்டு தடம் மாறிப் போகிறார்கள் என்பது வேதனையான உண்மை.

No comments:

Post a Comment