Sunday, 20 April 2014

பால் விலை நியாயமற்றது.. ஏன்...

இப்பெல்லாம் பால் விலை அதிகமாகிடிச்சுனு விளம்பரம் பண்ணறாங்க...

சில கேள்விகள் தமிழக மக்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் தவிர மத்தவங்களுக்கு...

1) சரக்கடிக்கிறீங்களே, அது வெரும் 180மிலி 80 ரூபாவாமே... அப்ப தெரியலையா அதோட விலை அதிகம்னு???

2) போய் தினுசா நின்னு பெப்புசி கோக்ககோலா குடிக்கிறீங்களே, அதெல்லாம் 200 மிலி 10ரூபாயாமே...

3) அளுக்கொரு கைபேசி, அதுல மாசாமாசம் பாட்டு வைக்கிறீங்க, இன்டெர்நெட் வைக்கிறீங்க, வாட்சாப்புங்கிறீங்க, பேசுபுக்குங்கிறீங்க, கூகிலுங்கிறீங்க.. எல்லாம் சும்மா வருதா??,

இதுமாதிரி ஒரு லச்சம் வெட்டி செலவு பண்ணறீங்களே, ஒரு லிட்டர் பால 40ரூபா குடுத்தும் வாங்கலாமே...

இன்னைக்கு நிலவரத்த சொல்லிடுறேன்... ஒரு கத்தை வைக்கோல் 30ரூபா, ஒரு கத்தை சோளத்தட்டு 5ரூபா ஒரு கிலோ தவிடு 15ரூபா, ஒரு கிலோ கலப்புத்தீவனம் 25 ருபா, ஒரு கிலோ பருத்திக்கொட்டை விலை 22 ருபா, ஒரு கிலோ உளுந்தங்குருணை 16 ரூபா... ஒரு  கறவை ஒரு நாளைக்கு ஒன்னரை கத்தை வைக்கோல், ரெண்டு கத்தை சோளத்தட்டு சாப்பிடுது, பசுந்தீவனம் கொண்டு வர ஒரு ஆள் ரெண்டு மணி நேரம் பாடுபடனும், ஒரு நாளைக்கு மூனு வேளை தண்ணி காட்டனும், அதுல ஒரு கிலோ தவிடு, 300 கிராம் பருத்திக்கொட்டை, 500 கிராம் கலப்புத்தீவனம், 200 கிராம் உளுந்தங் குருனை போடனும்,,, ஆக செலவு ஒரு நாளைக்கு செலவு 90 ரூபாய்... நான் ஆள் கூலிய இந்த செலவுக்கணக்குல சேக்கல...

ஒரு கறவை சாரசரியா ஒரு ஈத்துக்கு 250 நாள் பால் கறக்கும்... கன்னுப்போட்ட முதல் மூனு மாசத்துக்குத்தான் சராசரியா 8-10 லிட்டர் பால் குடுக்கும்... அப்பறமா குறைஞ்சு குறைஞ்சு வத்தக்கறவையான பின்ன ஒரு லிட்டர் அரை லிட்டர்னு கம்மியா பால் குடுக்கும்... சராசரியா ஒரு ஈத்துக்கு ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் குடுக்குதுனு வச்சிக்கிட்டா, ஒரு வருசத்துல அதிகபட்சமா 1500 லிட்டர் பால் கிடைக்கும்.. இப்ப கொஞ்சம் நடுநிலையான கொழுப்புச்சத்துமிக்க பால்னா, ஒரு லிட்டர் 20-22 ரூபாய்க்குப் போகும்... அப்ப சராசரியா லிட்டர் 21 ரூபாய்க்கு கொள்முதலாகுதுனு வச்சிக்கிட்டா ஒரு வருசத்துக்கு ஒரு கறவை 31000 ஓவா (எம்டன் மகன்ல வடிவேலு ரூபாய்ங்கறத ஓவா னு சொல்லுவாருல அப்படி) கிடைக்கும்... சொலவு வருசத்துக்கு (350 X 90) 31500 ரூபாய்... ஆக லாபமுமில்லை. நட்டமுமில்லை...

இப்ப மருத்துவ செலவு, கருத்தரிப்புச்செலவு, ஆள் கூலி (ஒரு நாளைக்கு 2 மணி நேரம், ஒரு மணிநேரத்துக்கு கூலி 15 ரூபாயினு வச்சிக்கிட்டா 2X 15=30.. (அதென்ன 15 ரூபாய்னு வச்சிக்கிட்டா?? ஒரு நாளைக்கு MNREGA திட்டத்துல 100 ரூபாய் கூலி தர்ராங்கல, அந்த அடிப்படைல விவசாயத்துக்கு ஒரு நாளைக்கு கூலி 150 ரூபாய்... ஒரு விவசாய கூலி நாளுங்கிறது அதிகபட்சமா 10 மணிநேரம்)) அப்படீனு இன்னும் பல உப செலவுகள் ஒரு கறவைக்கு 5000 அதிகமாகும்... இப்ப நட்டம் 5000...

இப்படியே சில ஓட்டுப்பொறுக்கிங்க கூவுறமாதிரி பால் விலை பால் விலைனு கூப்பாடு போட்டீங்கனு வச்சுக்கங்க, விவசாயிங்களுக்கு லாபம் தர்ர கொள்முதல் விலை கிடைக்காது... இப்பவே பல விவசாயிங்க வீட்டுக்கு மட்டும் ஒரு கறவை போதும் மத்ததெல்லாத்தையும் வித்துடலாமுனு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க... ஒரு நாள் வரும், அப்போ வெளி மாநிலங்களிலிருந்து பால் இறக்குமதி செய்யுற நிலை வரும்,,, அங்கெல்லாம் பணத்துக்குத் தகுந்த பட்சணம் தான் தருவாங்க... அப்ப பால் ஒரு லிட்டர் 60 - 70னு விக்கும்...

நான் மேல சொன்ன வெட்டிச்செலவுகள் எல்லாம் பெரு முதலாளிகளோட கல்லாப்பெட்டிக்குத்தான் போகும்... பாலுக்கு நாம் குடுக்கற காசு நம்ம விவசாயிகளுக்குப் போகும்.... 

No comments:

Post a Comment