Friday, 18 April 2014

தமிழக மின் பற்றாக்குறை - காரணங்கள்

தமிழக மின் பற்றாக்குறையின்!?!? காரணம்.

மின் பற்றாக்குறை எப்படி ஏற்படுகிறது?

தேவையைவிட உற்பத்தி குறைவாக இருந்தால் அப்பொழுது பற்றாக்குறை ஏற்படுகிறது.

சரி இப்பொழுது தமிழகத்தின் நிலைமையைப் பார்ப்போம்.

தமிழகத்தின் மொத்த மின் கட்டுமானம் (2011-12),

அனல் = 8050MW
புனல் = 2310MW
காற்றாலைகள் = 6987MW
கோ.ஜென் = 559MW
பயோ = 137MW

மொத்த கட்டுமானம் = 18048MW.

2011-12 நிலையில் தேவை = 12000MW.

கட்டுமானம் தேவையைவிட அதிகமாக இருக்கும் பொழுது, எவ்வாரு பற்றாக்குறை ஏற்படுகிறது??

இப்பொழுது மேலும் சில கணக்குவழக்குகளைப் பார்ப்போம்.

அனல், கோ.ஜென், பயோ மின் நிலையங்களில் 80% உற்பத்தி கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால்,

(8050+559+137) X 80% = 8746 X .80 = 6997 MW

புனல் மற்றும் காற்றாலைகளில் 30% மின் உற்பத்தி கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால்,

(2310+6987) X 30% = 9297 x 0.3 = 2789MW.

மொத்த மின் உறபத்தி = 6997 + 2789 = 9786 MW.

பற்றாக்குறை = தேவை - உற்பத்தி = 12000-9786 = 2214MW.

நமது மாநிலம் முந்தைய காலங்களில் மாற்று மின் திட்டங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் கொடுத்ததால் 2011-12 நிலவரப்படி மொத்த மின் கட்டுமானத்தில் அவற்றின் பங்கு 48.4 சதவிதமாக இருந்தது. இத்திட்டங்களில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி கிடைக்காதது மற்றும் பருவநிலையின் பாதிப்புகள் இவற்றிலிருந்து நம்மால் அதிகப்படியான மின்னுறப்த்தியை பெற முடிவதில்லை. ஆனால் மாறிவரும் பருவ நிலையைக் கருத்தில் கொண்டும், அருகிவரும் எரிபொருள் வளங்களைக் கருத்திள் கொண்டும் நாம் இன்னும் அதிகப்படியான பலவகைப்பட்ட  மாற்று மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

2013 நிலவரப்படி அனல் மின் நிலையங்களின் மொத்த கட்டுமானம் 13670 MW ஆக அதிகரித்து இருக்கிறது (மொத்த கட்டுமானத்தில் 58% ).

தற்போது பல நிலைகளில் (18000MW) இருக்கும் அனல் மின் திட்டங்கள் 2016க்கு பின்  உற்பத்தியைத் தொடங்கும் பொழுது, நம் மாநிலம் உபரி மின் உற்பத்தி கொண்ட மாநிலமாக மாறிவிடும்.

மேலும் தற்பொழுது கூடங்குலம் அனுமின் நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரமும் சேரும்பொழுது ஓரளவு மின் பற்றாக்குறையைப் போக்கலாம்.

தமிழக அரசின் சூரிய மின் கொள்கையின் படி அடுத்த மூன்று வருடங்களில் 3000MW மின் கட்டுமான இலக்கு நிற்னயிக்கப்பட்டிருக்கிறது.


எதிர்காலம் நம்பிக்கையளித்தாலும், நிகழ்காலத்தில் சற்று சிரமப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment