Tuesday, 23 December 2014

நவீன உலகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் நிற்கும் அந்த ஒற்றைக்கருவியும், உற்பத்திமுறையும்.

நவீன உலகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் நிற்கும் அந்த ஒற்றைக்கருவியும், உற்பத்திமுறையும்.
உலகின் (அதாவது மனிதனின் வாழ்க்கையை) மாற்றியமைத்த கண்டுபிடிப்புகள் ஏராளம். கல்லை வைத்து வேட்டையாடியது, தீயை உருவாக்கியது, விதையைப்போட்டு முளைக்கவைத்தது, மண்ணை உருக்கி உலோகம் படைத்தது என நவீன மனிதகுலத்தின் வாழ்வியலை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகள் ஏராளம்.
கிடைப்பதை உண்டது, உடுத்தியது, உணவு தேடி இடம்பெயர்ந்தது, இயற்கையாக விதை விழுந்து முளைக்கும் வரை காத்திருந்து சேமித்தது, விதையைப்பாதுகாத்துவிளைவித்தது, காடுகளை அழித்து கழணிகள் உருவாக்கியது முதல் பாய்மரக்கலங்களில் பயணித்து நாடுகள் பிடித்தது வரை நமது உற்பத்தி முறைகள் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் பரிணமித்து வந்தே இருக்கின்கறன.
இப்படி நாம் கண்டுபிடித்த கருவிகளும் பரிணமித்த உற்பத்தி முறைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலத்தின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்து அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியவை.
சரி, இன்றைய நவீன யுகத்திற்கு மனிதகுலத்தை நகர்த்திய அந்த கண்டுபிடிப்பு, உற்பத்திமுறை எதுவோ?
அந்த கண்டுபிடிப்பு, நீராவி இயந்திரம். ஆம், அதுவரை சோர்வடைந்து இடைநின்றுவிடும் (மனித மற்றும் மிருக) உடல் உழைப்பை நம்பியிருந்த போக்குவரத்தும், எந்திரங்களும் முதன்முதலில் ஒரு இடைநில்லா உந்துசக்தியைப் பெற்றன. மாதங்கள் வாரங்களாகின, வாரங்கள் நாட்களாகின, நாட்கள் மணிகளாகவும், மணிகள் நிமிடங்களாகவும் மாறிய கணம் முதல் நீராவி இயந்திரம் தனது வெப்பமூச்சை வெளிவிட்ட கணத்தில்தான். மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வராத நேரத்தை முதன்முதலில் வேகத்தால் கடக்க முடியும் என்ற நிலை வந்தது இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகுதான்.
அந்த உற்பத்தி முறை, தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்தி முறை. அதாவது ஆங்கிலத்தில் Assembly Line Production. இந்த உற்பத்திமுறை புழக்கத்தில் வந்தபிறகுதான் வணிகம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. தேவையை அடிப்படையாகக்கொண்ட வணிகம் உற்பத்தியை அடிப்படையாக்கொண்ட வணிகமாக மாறியது இதன்பின்தான். பல்லாண்டுகள் வடிவம் மாறாது புழக்கத்திலிருந்த பொருட்கள் சில ஆண்டுகளில் வடிவம் மாறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன. காரணம், எந்தவொரு பொருளும் திகட்டத்திகட்ட உற்பத்தி செய்து குவிக்கப்பட்டிருக்கும். தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்தி தொழிற்சாலைகளில் இலாபமானது தொடர் உற்பத்தியில்தான் அடங்கியிருக்கிறது. தொடர் உற்பத்தியை விற்றுத்தீர்க்க சந்தைகள், சந்தைகளில் பொருட்களைக்கொண்டு சேர்க்க போக்குவரத்து, பொருட்களை வாங்கவைக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது. அதைச்சாத்தியப்படுத்த தொடர் ஆய்வுகள், வாடிக்கையாளர்களைக் கவர விளம்பரம், தக்கவைக்க விற்பனைக்குப்பின்னான சேவை என நமது உற்பத்திமுறையும் வணிகமும் மாறியது இந்த தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்திமுறையின் வருகைக்குப்பிறகுதான்.
இந்த தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்திமுறையைச் சாத்தியப்படுத்தியது அந்த நீராவி உந்து எந்திரம். அந்த நீராவி உந்து எந்திரத்தை இன்று நீரைப்பிளந்து எரிசக்தியை தூண்டுவது வரை பரிணமிக்கவைத்தது தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்திமுறை.
இவையே இன்றைய பெருமுதலாளித்துவத்துக்கு அடிப்படை.
-நெருப்பிளஞ்சேரன்.

Saturday, 26 July 2014

Need for continuing CSAT in Civil Services Selection Process

News - angry civil service aspirants want the roll back of CSAT in civil services prelims and collided with police, pelt stones and torch vehicles.

So the hooligans who pelt stones, torch public properties are civil service aspirants!! India is doomed...

What is civil services exam?

These exams are part of the selection process followed by the UPSC (union public service commission) to select suitable candidates for civil services.

What are civil services?

Services associated with the governance of the nation like IAS, IPS, IFS, IRS etc falls under civil services. There are 24 services that are identified as civil services.

What is CSAT?

The civil services exam has three stage.
1) prelims
2) mains
3) interview.

The prelims has two papers.
i) general studies
ii) CSAT.
CSAT - Civil services aptitude test.
It covers comprehension, interpersonal skills, logical reasoning, analytical ability, decision making, problem solving, general memtal ability along with english language comprehension skills. Before CSAT, the pattern was general studies and a optional paper (like botany, geography, civil engineering etc. )

The 8 questions under english comprehension part in the CSAT paper of prelims donot have negative marks for wrong answering.. they can be removed No objection. The CSAT Paper can be printed in all notified languages. No problem.

The problem is when people ask for scrapping CSAT. the other 72 questions are necessary as they filter such "hooligans" from real service aspirants.. India needs even tough aptitude filters as these hooligans only intend to loot public money and donot see civil services as a option to serve the nation...

A real aspirant like me (i work, earn, look after my family and read through the free time i get) will never have a chance to get pass through the prelims which has a optional paper. Majority who cleared prelims with optional papers study in the coaching centers!! They go to a school and read only the syllabus and the material provided by the centera and practice on repeated questions.. will botany as a optional paper radically change every year? Or are they going to ask about the geography of mars one year and that of venus the next year? But in CSAT, i a tax payer and those many who take up the reaponsibility of supporting their family, those who cannot afford the maney to go to cities and study in coaching centers and those many professionals will have a level playing field and the services will have the opportunity of selecting people with varied domain experiences and world knowledge rather than the coaching center products. Past two years i witnessed many practiaing doctors, engineers, working professionals appearing in the mains.. the experience, knowledge, culture they bring in is enormous. India needs more responsible people rather than people good in mugging up..

The best way forward is to increase the scrutiny in CSAT, eliminate the optional paper in Mains, introduce psycological tests and select post specific candidates.

CSAT should not be scrapped.

சாராயத்தை குடும்ப அட்டையில் சேர்க்க வேண்டும்!!

இப்ப தேர்தல் நேரம்கிறதால குடி குடியைக் கெடுக்கும்னு கூப்பாடு போடுறவங்களாம் டாஸ்மாக்க மூடுங்கனு கூப்பாடு போடுறாங்க... அரசும் விற்பனை நேரத்தக் குறைக்கிறோம், பாதிக் கடைகள மூடுறோம்னு கோயபெல்ஸ்கள கட்டவிழ்த்துவிட்டிருக்கு... என்ன செய்யலாம்? டாஸ்மாக்க மூடிடலாமா? பூரண மதுவிலக்க அமல்படுத்திடலாமா? 

டாஸ்மாக்க மூடி பூரண மதுவிலக்க அமல்படுத்துனா என்னாகும்? ஒன்னு நிச்சயமா நடக்கும்... பாண்டியிலும், காரைக்காலிலும், பெங்களூரிலும், கேரளக் கள்ளுக் கடைகளிலும் விறபனை ராக்கெட் ஏறிடும் அவ்வளவுதான்... அப்பறம் கள்ளச்சாராயம் காய்ச்சுறது குலத்தொழிலாகிடும்... 

என்னோட கருத்து என்னன்னா, சாராயம் குடிக்கிறது தனிமனித உரிமை. அத தடுக்க முடியாது!! ஆனா, அந்த தனி மனிதனுக்கு எவ்வளவு சாராயம் கிடைக்கனும்னு நாம தீர்மானிக்கலாம். அதுக்கு முதல்ல சாராயத்த தலைக்கு மாசத்துக்கு இவ்வளவுதான்னு நிர்ணயம் பண்ணனும். எப்படினா, ஒரு குடும்ப அட்டையில எத்தனை பேரு இருக்காங்களோ அத்தனை பேருக்கு தலைக்கு இவ்வளவு கிலோ சர்கரைனு ரேசன் கடையில விக்கிற மாதிரி, தலைக்கு இவ்வளவு அளவு சுத்த சாராயம்னு ரேசன் கடையிலயே வச்சு வித்துடலாம். அதாவது, சாராயத்தையும் குடும்ப அட்டையில சேர்த்திடலாம்கிறேன்.

எப்படியும் பெரும்பாலான பெண்கள் சாராயம் குடிக்க மாட்டாங்க. அதனால அவங்க பேர சொல்லி ஆண்கள் குடிக்கிறதுக்கு பதிலா, எத்தனை பேர் குடும்பத்துல சாராயம் குடிப்பாங்கனு அவங்களே முடிவு பண்ணி விண்ணப்பம் செய்யனும். இப்ப ஒரு வீட்டுல குடும்பத்தலைவர், அவர் மனைவி, அவர் அப்பா, அம்மா, அவரோட மகள் மகன்னு மொத்தம் ஆறு பேர் இருக்காங்கனு வச்சிக்குங்க, எப்படியும் அந்த மூனு பெண்களும் சாராயம் குடிக்க மாட்டாங்க. தாத்தாவும் குடிய நிறுத்தியிருப்பாரு. அந்த மகன் குடிச்சா வீட்டுல தர்ம அடிதான் கிடைக்கும். குடும்பத் தலைவர் குடிக்கிறாருனு வச்சிக்கிட்டா, அந்த குடும்ப அட்டைய வச்சி ஒருத்தருக்குண்டான அளவு சாராயம் மட்டும்தான் வாங்க முடியும். இதுல என்ன சிறப்புனா, குடிக்கிறவங்க என்ன குடிக்கிறாங்க, எவ்வளவு குடிக்கிறாங்கனு அவங்க குடும்பம் கண்கானிக்க முடியும். இது பலரையும் அளவா (ஏற்கனவே அளவாத்தான் சாராயம் கிடைக்கும்கிற சூழ்நிலையில) குடிக்க விடும். "குடிக்கிறவங்களுக்கும் தாங்கள் மத்தவங்களுக்குத் தெரியாம ஏதோ தப்பான விசயம் செய்யிறோம்கிற குற்ற உணர்வுக்கு பதிலா ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கும்."

அதோடையும் இந்த குடும்ப அட்டைய மின்னணு முறையில மாத்தனும். அப்பத்தான் எவ்வளவு சாராயம் மொத்தமா மாதம் தேவைப்படுது, எவ்வளவு சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்குனு அரசும் தெரிஞ்சிக்கமுடியும். அப்ப, எந்தெந்த குடும்ப அட்டைகளுக்கு சாராயம் விற்கபட்டிருக்குனு காவல்துறைக்கும் தெரியும். இபப்படிப்பட்ட தகவல்கள ஒரு சர்வர்ல உடனுக்குடன் ஏத்திட்டா, சாராயம் வேண்டாம்னு எழுதிக்குடுத்த யாராச்சும் சாராயம் குடிச்சிட்டு காவல் துறையில மாட்டுனா, அவங்க கடத்தல் சாராயமோ இல்ல கள்ளச்சாராயமோ குடிச்சிருக்காங்ககிறது உறுதியாயிடும். 

காவல்துறைக்கு கள்ளச்சாராயம் கடத்தல் சாராயத்த புடிக்கிறதுக்கு சொல்லித்தரத் தேவையில்ல. தடைய மீறி கள்ளிறக்க விவசாயிகள் முடிவு பண்ணப்போ, எந்தெந்த டாஸ்மாக் கடைகள்ல சராசரிக்கும் குறைவா விற்பனை நடந்திருக்கோ அந்தந்த கடைய சுத்தியிருக்க ஊர்கள்ல கள்ளிறக்குறாங்களானு சோதனை பண்ணாங்க. அந்தளவுக்கு அவங்க புத்திசாளிங்க.

குடிய ஒழிக்க முடியாதுங்கிறது இன்றைய நிதர்சணம். வள்ளுவர் அந்தக்காலத்துல பத்துக் குறள எழுதி குடிக்காதனு சொல்லியிருக்காருனா, நம்மாளுங்க கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடும் கள்ளோடும் முன்தோன்றயிருக்காங்கனு தெளிவாகுது. அதனால, அளவாக்க குடிக்கிறதுக்கு வழி செய்யலாம். அதிகமக் குடிக்கிறவங்கள, திருட்டுத்தனமாக் குடிக்கிறவங்கள வீட்டுல மாட்டிவிட்டுடலாம்.

இப்ப, நான் எப்பவாச்சும் குடிப்பேன். ஆனா வீட்டுல தெரியாது. இனி ரேசன் கடையில வாங்கித்தான் குடிக்கனும்கிற நிலை வந்தா, ஒன்னு நான் வீட்டுல உண்மைய சொல்லனும், இல்லாட்டி குடிய விடனும், இல்லாட்டி என் அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு அவர்கிட்ட கொஞ்சம் கடன் வாங்கிக் குடிக்கனும். இல்ல நண்பர்கள்கூட பகிர்ந்து குடிக்கலாம்னு பார்த்தா, அந்த பயலுங்க எல்லாரும் அவங்கவங்க வீட்டுல தர்ம அடி வாங்கிட்டு இருப்பானுங்க!!! எது எப்படி இருந்தாலும் என் வீட்டுக்கு நான் என்ன பண்றேனு தெரிஞ்சிடும். அது வரைக்கும் நல்லதுதான்.

Wednesday, 23 July 2014

Hitler and Britain....

The Battle of Britain as it is called was not a German invasion intended to conquer Britain. The Germans had planned for Operation Sea Lion to conquer the British Isles after the operation Blitzkrieg and the Battle of France. But Hitler never seriously wanted to conquer the united Kingdom. He had a soft corner for the Brits as he felt their success in colonizing the third world was indeed a triumph of the Aryan race.
One interesting fact from the German campaigns of the WWII is that, the same Germans who experimented with Mass murdering, gave off a chance to Annihilate nearly 3,00,000 Allied soldiers during the Battle of France. The British Expeditionary force which was fighting along with the French against the Germans during the Blitzkrieg was out maneuvered and were forced to regroup at the French coast in Dunkirk. The Second Panzer (Tank) Division of the German Army headed by one of the Finest Tank commander in History, General Heinz Guderian had the BEF at the mercy of their Tank guns, But the German High Command ordered the Infamous "Halt". This single stupid command itself was the turning point of the War. The British Evacuated a total of 3,38,000 Soldiers from Dunkirk and this allowed them to believe that they had the blessings and allowed them to regroup, rearm and just wait for the correct time to invade the continental Europe along with the formidable ally in the Americans.
In a speech to the House of Commons, British Prime Minister Winston Churchill called the events in France "a colossal military disaster", saying that "the whole root and core and brain of the British Army" had been stranded at Dunkirk and seemed about to perish or be captured. In his 'We shall fight on the beaches' speech on 4 June, he hailed their rescue as a "miracle of deliverance".
As it was to be found out later, Hitler had the ultimate motive of the triumph of the Aryan race over others, The modern day assumption is that He never wanted to Invade or conquer the Britain and He just wanted to either test the Luftwaffe or give the British a Bloody nose. His Master plan was to colonize the east and propagate the Aryan Gene through ethnic cleansing, forced pregnancy with German sperms etc., as in the "Master plan east" or the "Generalplan Ost".

Thursday, 26 June 2014

ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா

விக்கிரமாதித்தியாவை வாங்க முடிவு செய்தது 1990களில், ஆனால் அன்றைய பொருளாதார சூழல் நம்மை அந்த கப்பலை வாங்க விடவில்லை...
ஆனால் பொருளாதாரம் வளரத்துவங்கிய காலகட்டத்தில் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் கடற்படையின் தொலைந்துபோன காலகட்டமான 1980-2000 இருந்த பொருளாதார நெருக்கடிகளால் புதிய கப்பல்கள் வாங்காமல், பலகாலம் உழைத்து அரதப்பழசாகிப்போன கப்பல்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த படையைத் தூக்கி நிறுத்தவும், ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக உழைத்துக்ககொண்டிருக்கும் ஐஎன்எஸ் விராத்தின் ஆயுட்காலம் முடிவுறும் தருவாயில் இருந்ததாலும் நமது விமானந்தாங்கி கப்பல் இயக்கும் நுட்பத்தை இழந்துவிடாமலிருக்கவும், விராத்தின் ஓய்வு மற்றும் உள்நாட்டில் கட்டமுடிவு செய்யப்பட்ட விமானந்தாங்கி கப்பல் படையில் இணைவதற்குமான கால இடைவெளியை இட்டுநிரப்பவும், அதே கால இடைவெளியில் படையினை அடுத்தகட்டத்திர்கு கொண்டுசெல்லும் பொருட்டும் வாங்கப்பட்டதுதான் விக்கிரமாதித்யா என்று புதுப்பெயர் பெற்ற சோவியத்தின் அட்மிரல் கோர்பசேவ். அந்தக்கப்பலின் சகோதரக் கப்பல்களில் ஒன்று உடைக்கப்பட்டுவிட்டது, இரண்டு கப்பல்கள் சீனாவில் ஆடம்பர விடுதிகளாக இருக்கின்றன..



அந்த கப்பலை ருசியா நமக்கு இலவசமாகத்தந்தது. ஆனால் நாம் அதன் புனரமைப்பிர்கு செலவு செய்யவேண்டியிருந்தது... அத்தோடும் மிக்29க ரக ஜெட் விமானங்களை வாங்கவும் செலவானது. இந்த புணரமைப்பு பற்றிய தவறான மதிப்பிடல்தான் அந்த கப்பல் பல்லாண்டுகளாக கட்டுமானதளத்தில் இருக்கவும் படையில் இணைய தாமதமானதற்கும் காரணம். உதாரணமாக அந்த கப்பலின் மின்சார மற்றும் தொலைத் தொடர்பு கேபில்களை முற்றாக மாற்றவேண்டி வந்ததது. இது பற்றிய மதிப்பீடு முதலில் செய்யப்படவில்லை. அதோடும் அந்த கப்பல் அதுவரை பல்லாண்டுகளாக வெறுமனே மிறுத்திவைக்கப்பட்டு இருந்ததால் பல இயந்திரங்கள் துருவேறி பயன்படுத்தமுடியாத நிலையிலிருந்தன. அதோடும் அந்த கப்பல் ஒரு முழுமையான விமானந்தாங்கிக் கப்பல் கிடையாது. அது ஒரு Aircraft Carrying Cruiser. அதாவது விமானங்களையும் பல்லாயிரம் கிமீ தூரம் பறந்து கப்பல்களையும் கரையிலிருக்கும் இலக்குகளையும் தாக்கும் ஏவுகணைகளையும் கொண்ட கப்பல். அந்த கப்பல் மிக்29க போன்ற சற்றுப் பெரிய போர் விமானங்களை இயக்குமாறு வடிவமைக்கப்படவில்லை. மாறாக நாம் விராத்தில் இயக்கும் Harrier போன்று குறைவான தூரம் ஓடி மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கவல்ல Yak38 எனும் STOVL (Short Take-Off and Vertical Landing) ரக விமானங்களை இயக்க வடிவமைக்கப்பட்டது. ஆனால் நமது தேவையோ மிக்29க ரக குறைந்ததூரம் ஓடி மேலெழும்பும், இறங்கையில் கயிற்றால் இழுக்கப்பட்டு நிறுத்தப்படும் STOBAR (Short Take-Off But Arrested Recovery) ரக விமானங்களை இயக்குவது. அதற்காக அந்த விமானத்தின் அகலம் அதிகப்படுத்தப்பட்டது, அதன் முன் பகுதியிலிருந்த ஏவுகணை எவுதளங்கள் நீக்கப்பட்டு 13 கோணம் சாய்வான நிலையிலுருக்கும் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. ஓரே ஒடுபாதை மட்டும் இருந்த நிலையில் இரண்டு ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. ருசியக் கடல் பிராந்தியங்களுக்கு குளிரூட்டு அமைப்புகள் தேவைப்படாது மாறாக நமது தட்பவெப்பத்திற்கு தகுந்தார்போல் குளிரூட்டு அமைப்புகள், நமது கடல் வெப்பத்தைத் தாங்கும் வகையிலான பூச்சுக்கள் என் செய்யவேண்டிய வேலை ஒரு புதுக் கப்பலைக் கட்டுவதற்கு இணையாக இருந்தன.


இதுநாள்வரை நமது கடற்படையின் முன்கள தாக்குதல் விமானமாக இருந்த Sea Harrier விமானம் முந்தைய தலைமுறை விமானம். ஆனால் மிக் 29க நான்காம் தலமுறையைச் சார்ந்த போர் விமானம். இது நமது கடற்படையின் விமான இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. அதிகப்படியான கடற்பரப்பை நமது கடற்படையால் இந்த விமானங்களைக் கொண்டு கட்டுப்படுத்தமுடியும்.


விராத்திற்கு  இப்போது 61 வயதாகிறது. அதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகாலத்திற்குள் ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் புதிதாகக் கட்டப்படும் விமானந்தாங்கிக் கப்பலான விக்கிராந்த் 2019 அல்லது 2022 ஆம் ஆண்டில் படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அப்போது நமது கடற்படை இரண்டு நவீன விமானந்தாங்கிளில் 60 முன்கள போர் விமானங்களை இயக்கும் நிலையிலிருக்கும்...


தற்போதைய சூழலில் நமக்கு மேற்கு கடற் பிராந்தியத்தில்தான் விமானந்தாங்கிக் கப்பல் அவசியம். பாகிஸ்தானுடன் போர் வந்தால் அணுவாயுதத் தாக்குதல்களுக்கு முன்னதாக போரினை முடிக்க இந்த விமானந்தாங்கிகளும், படையிறக்கு கப்பல்களும் அவசியம். அப்போது நம்மால் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று பக்கங்களிலிருந்து தாக்குதல் நடத்தமுடியும். அவர்களால் தற்போதைய நிலையிலும் எதிர்காலத்திலும் நமது கடற்படையின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியவே முடியாது. கிழக்கு கடற் பிராந்தியத்தில் அணுசக்தி நீர்மூழ்கிகளும், நீர்மூழ்கி வேட்டையாடிக் கப்பல்களும் அவசியம். எனென்றால் அங்கு சீனக் கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிகளின் நடமாட்டமும், சீனாவின் அணுவாயுத பலத்தைச் சமன்படுத்த அணுவாயுதம் தாங்கிய ஏவுகணைகளை நீர்மூழ்கிகளிலிருந்து ஏவும் வசதியைப்பெறவும் நமக்கு அத்தகைய கப்பல்கள் அவசியம். ஆனால் அதோடும் தென் சீனக்கடலில் மாறிவரும் அரசியல் மற்றும் கிழக்காசியாவிலிருக்கும் நமது வியாபாரத்தைப் பாதுகாக்கவும் நமக்கு விமானந்தாங்கிகளை நடுநாயகமாகக் கொண்ட படைக்கல அணிகள் அவசியமாகின்றன.. அதை நோக்கி ஆமை வேகத்தில் நமது கப்பல் கட்டும் தளங்கள் இயங்கிக்கொண்டும் இருக்கின்றன...


ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியாவை வாங்கியது போன்றே ஐஎன்எஸ் சக்ரா அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கியை குத்தகைக்கு வாங்கியதும் ஆரம்பம்தான்... இவை நமது கடற்படைக்கு புதிய தலைமுறை தளவாடங்களை அறிமுகப்படுத்தும்,,,, இவற்றை இயக்கி நாம் கற்கும் விசயங்கள் நாம் கட்டிக் கொண்டிருக்கும் விக்ராந் ரக விமானந்தாங்கிக் கப்பல், அரிகந்த் ரக அணுசக்தி நீர்மூழ்கிகளின் கட்டுமானத்திலும் எதிரொளிக்கும்...
இன்றைய நிலையில் விக்கிரமாதித்தியாவிற்கு நாம் செலவு செய்ததற்கு இத்தாலியிலிருந்தோ பிரான்சிலிருந்தோ புதிய விமானந்தாங்கியை வாங்கியிருக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள்.. ஆனால் நாம் விக்கிரமாதித்தியாவை வாங்க முடிவு செய்தபோது நம்மிடமிருந்த பொருளாதாரத்திற்கு விக்கிரமாதித்தியா மட்டும்தான் வாங்கக்கூடியதாக இருந்தது, அதோடு ருசியா மட்டும்தான் நமக்கு ஒரு விமானந்தாங்கிக் கப்பலை விற்க முன்வந்தது. 

Wednesday, 25 June 2014

விமர்சனம் : ஆல் இன் ஆல் அழகுராசா

கொஞ்சம் பழசுதான்,,, ஆனா இப்ப படிக்கவும் சிரிப்பு வரும்...

ஒரு படம் பார்க்கப் போனா, நுழைவுச் சீட்டு குடுக்குறப்பவே முன்னெச்சரிக்கை செய்யனுமா இல்லையா?? இங்கப் பாருப்பா தம்பி படம் பார்கறப்போ உனக்கு வாந்தி எடுக்கனுமுனு தோனும், தலை சுத்தி மயக்கம் வரும்.. ஏதோவொரு சமயத்துல உனக்கு கை தட்ட தோனும், ஆனா அப்ப உன் சத்தம் மட்டும் தான் பெரிசாக் கேக்கும் (அப்ப மத்தவங்க???) ஏனா மத்தவனெல்லாம் பத்தாவது நிமிடத்துல ஓடியிருப்பான் இல்லையினா ஒரு ஓரமா மயங்கி மட்டையாகியிருப்பான்.. எப்பவாவது நல்ல (உண்மையிலயே!?) நகைச்சுவைக் காட்சி ஒன்னு வரும், அப்பக் கூட அது நகைச்சுவைக் காட்சினு புரியாம சிரிக்கனுமா வேண்டாமானு தெரியாம முழிப்ப... அப்படியே உன் சுய நினைவ இழந்து உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குன, உன்ன இந்த படத்துக்கு கூட்டியாந்த நண்பன், இடைவேளை அப்போ எதிரியா மாறியிருப்பான்... (ஆமா என் நண்பன் என்ன ஆனான்??) அவன தேடிப் பார்த்தியானா, அவன் ஏதாவது ஒரு தெருமுனையில தலை முடியெல்லாம் பிச்சிக்கிட்டு சுத்திட்டு இருப்பான்... இப்ப சொல்லு இந்த படம் பார்க்க உனக்கு சம்மதமா??

இந்த மாதிரியெல்லாம் எச்சரிக்கை செய்யனுமா இல்லையா?? தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கா இல்லையா???

கார்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு நியாயமானதா? அது முதலாளித்துவமில்லையா?

அந்த செய்தி முதலில்,

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98076

இது சோசலிசமும் முதலாளித்துவம் கலந்தது. கார் விற்பனை நிகழ்ந்தால் முதலாளிகளுக்கு லாபம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு காரும் சம்பளம் தருகிறது. கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் (பணியாளர்களில் பெரும்பாண்மையினர்) சம்பளமானது அவர்கள் எவ்வளவு மணிநேரம் பணிபுரிகிறார்கள் என்பதைப் பொருத்தே. இப்போது ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் மாதம் 6000 கார்களையே விற்கிறது என்று வைத்துக்கொண்டால் அந்த நிறுவனத்தின் மணிக்கு 50 கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையில் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு வேலை நடந்தாலே போதும். அந்த வகையில் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாண்மையினருக்கு நான்கு நாட்களே வேலையிருக்கும். அதாவது மூன்று நாட்களுக்கான சம்பளம் கிடையாது. 

இப்போது விற்கபடும் பொருட்களின் விலையில் அதற்காக உற்பத்தியாளர் கட்டும் வரியும் சேர்க்கப்படுகிறது. அதாவது ஒரு காரின் உற்பத்திச்செலவு மற்றும் உற்பத்தியாளரின் லாபம் ஆகியவை சேர்ந்து 4 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதன் மீதான உற்பத்தி வரி 12% என்றால் அதன் விற்பனை மதிப்பு இப்போது,

உற்பத்திச்செலவு + உற்பத்தியாளர் லாபம் = 400000
உற்பத்தி வரி = பொருள் மதிப்பின் மீது 12% = 48,000.
தொழிற்சாலைக்கு வெளியே பொருளின் மதிப்பு = 4,00,000 + 48,000 = 4,48,000.

இப்போது, விற்பனையாளரின் லாபத்தையும் கணக்கில் சேர்த்தால், 

விற்பனையாளர் லாபம் = தொழிற்சாலைக்கு வெளியேயான பொருளின் மதிப்பின் மீது 10% = 44,800.

இப்போது இதையும் காரின் மதிப்போடு இணைத்தால் காரின் விற்பனை விலை வரும். இப்போது,

விற்பனை விலை = 4,92,800.

இப்போது ஒருவர் அந்த காரை வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் 4,92,000 கொடுத்து அதை வாங்க வேண்டும்.

அடுத்து அந்த வாகனத்தை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய தமிழகத்தில் சாலை வரியாக 10% கட்ட வேண்டும், அந்த காருக்கு 12,500 கொடுத்து காப்பீடு செய்யவேண்டும் மற்றும் பதிவுக்கட்டணமாக 5000 செலுத்த வேண்டும். 

இப்போது,

காரின் சாலை விலை= 492000 + 49200+12500+5000 = 558700.

இதே அந்த காரின் மீதான விற்பனை வரி 12% பதிலாக 8% ஆக இருந்தால் அந்த வாகனத்தின் சாலை விலை 5,38,000 ஆக இருக்கும். அதாவது 20000 குறைவாக இருக்கும். இது குறைவான விலையாகத் தெரியலாம். ஆனால் வாங்குபவர் அந்த காரை வாகனக்கடன் பெற்று வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் செலுத்தவேண்டிய மாதத்தவணை சற்று குறையும், வாங்குபவருக்கு அதனால் 20000 லாபமெனில் அவர் அந்த பணத்தை வைத்து வேறேதாவது பொருளைக்கூட வாங்கலாம்... அந்த பொருளின் விற்பனை வேறு சிலருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும்...

இப்போது இந்த விலை குறைவதினால் அந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாதம் 1000 கார்கள் கூடுதலாக விற்றால் அதன் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு கூடுதலாக அரை நாளுக்கு வேலை கிடைக்கும், இதுதான் இந்த வரிகுறைப்பிற்கு பின்னிருக்கும் கணக்கு.

இலங்கையில் நமக்கு நண்பர்கள் அவசியம்!

சிங்களவர்கள் நமது எதிரிகளாக இருக்கலாம். அதற்காக நம் இனத்தவருடன் இணைந்து வாழும், அவர்களது துன்பத்தில் பங்கேற்கும் சிங்களவர்களையும் எதிர்ப்பது நியாயமற்ற, நம்மை இராசபச்ச போன்றோரின் தரத்திற்கு தாழ்த்தும் செயலாக மாறிவிடும்... அந்த நிலைக்குத் தரந்தாழ்ந்து நாம் செய்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலைகளன்றி வேறேதுமில்லை... வெற்று அரசியல் மட்டுமே செய்ய ஈழத்தைக் கைகளில் எடுத்திருக்கும் சிலருக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் செய்பவர்களுக்கும் வித்தியாசமில்லை... அப்படி ஈழத்தை தங்களுக்கு சோறிடும்பாத்திரமாக எண்ணிக்கொண்டிருப்பவர்களை அடையாளங்கண்டு ஒதுக்கிவைப்பது நமது கடமை...
இன்றும் ஈழத்தமிழர்கள் எதிரியின் பிடியிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கு முதலில் சுதந்திரத்தை வாங்கித்தருவது நமது கடமை. அதனினும் முதன்மையானது அவர்களுக்கு சமகால இலங்கைக்குள்ளாக நண்பர்களை உருவாக்கிக் கொடுப்பது. அதன் முதல் படியாக இலங்கையின் அரச பயங்கரவாதத்தை எதிர்பவர்களுடனும், தமிழர் நலனில் அக்கரை கொண்ட, தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் சிங்களவர்களுடனும் நாம் இணைந்து செயல்படவேண்டும்... எதிரிகளை அழிப்பதை விட முதலில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முனையவேண்டும்... எதிரியை வீழ்த்தும் பயணத்தில் எடுத்து வைக்கவேண்டிய முதல்படி, அவனது செயல்களைக்கண்டு வருந்தும் அவனது உறவினர்களை நமது நண்பர்களாக்கிக்கொள்வதே... இலங்கையின் மீதான படையெடுப்பின் முன் இராவனனின் செயல்களுக்கு வருந்திக் கொண்டிருந்த விபீடணனை நண்பனாக்கிக் கொண்டதைப் போல (எடுத்துக்காட்டு அவ்வளவே. இராவணனை தமிழர் என்ற அடையாளத்தில் காண்பவர்கள் பொறுத்தருளவும்).
சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சிங்களர் இயக்கிய படமான With you, Without You திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரிகளில் படிக்கக் கிடைக்கிறது.

Thursday, 5 June 2014

சென்னையின் படித்த மூடர்கள்

சென்னையின் வாக்காளர்கள் உண்மையிலேயே என்னை வெட்கப்பட வைத்துவிட்டார்கள்... இன்னிலை சென்னையில் மட்டுமல்ல... பெங்களூருவிலும் இதே நிலை... பெரு நகரங்கள் தனியாக இயங்குகின்றனவா?? அவற்றின் செழுமை அந்நகராங்களின் மக்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் என்றஎண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறதா?? இவர்கள்தானே இங்கு எதுவும் ஒழுங்கில்லை என்று கூப்பாடு போடுகிறார்கள்... இவர்கள் தானே சிறு நகரம் மற்றும் கிராமத்தின் மக்களை காட்டான்கள் என்றும் நாட்டான்கள் என்றும் சொல்லி ஒதுக்குகிறார்கள்???

தருமபுரி தமிழகத்தின் பிந்தங்கிய பகுதிகளில் ஒன்று... அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கு அந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் கடமை இருக்கிறது... இனி இறைவனிடம் வேண்டும்போது மக்களாட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தருமபுரி போன்ற ஊர்க்காரர்கள் நன்றாக இருக்க வேண்டிக்கொள்வேன்... சென்னையின் படித்த மூடர்க்கூட்டம் திருந்தட்டும்... அதுவரை என்பார்வையில் அவர்கள் பணப்பேய்கள், படித்தும் அறிவில்லாதவர்கள்...

படித்தவர்களின் அறியாமை அச்சமூட்டுகிறது

//புல்லெட் ப்ரூப் ஜாக்கெட் டன் இருந்த ஆறு இந்திய வீரர்களிடம் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை நீங்கள் ஆப்கான் காவல்துறை உத்தரவுக்ககவோ அல்லது நேட்டோ அமெரிக்கன் படை உத்தரவுக்ககவோ காத்து இருக்க வேண்டாம், தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்துவிட்டு இன்றிரவு தன்னுடன் இரவு விருந்துக்கு வாருங்கள் என உத்தரவு இட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரகளால் கொல்லப்பட்டு விட்டனர்.//

இப்படியொரு பொய்யை சிலர் (பாஜகவினரோ அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளோ) பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவின் எந்த பிரதமரும் இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாத ஒரு உத்தரவை மோடி அவர்கள் ஆப்கானத்தில் இந்திய தூதரகங்களுக்க பாதுகாப்பளிக்கும் இந்திய திபேத் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கியதாகவும், அவர்கள் அந்த உத்தரவின்படி தூதரகத்தின் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளை கொன்றுவிட்டு நேற்று இரவு தில்லி வந்து பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு மோடி அவர்களுடன் விருந்து உண்டதாகவும் ஒரு பொய்யைப் பரப்புகிறார்கள்... இந்த பொய்யை ஆயிரம் பேர் விரும்புகிறார்கள் மற்றும் ஐநூறு பேர் பகிருகிறார்கள்...

இப்படி பொய்களை படித்தவர்கள் பரிசோதனை செய்யாமல் நம்புவது ஒருபக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது...

எந்த பொய்யையும் மக்களிடம் எளிதாக விதைக்கமுடியும் என்பதை இப்படியான வதந்திகளின் பரவல் உறுதி செய்கிறது... கனிமொழி ஜாபர்சேட்டிடம் சொன்னது போல, 70% கேனையன்கள் எதைச்சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்பது உண்மைதான் போல...

படித்த முட்டாள்களே, உங்களை நம்பித்தான் மோடி அவர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும் கனாக்கண்டு கொண்டிருக்கிறார். எதைச் சொன்னாலும் உடனடியாக அதை அப்படியே நம்பாமல், வள்ளுவப் பாட்டன் சொன்னது போல,

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளையும்,

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளின் கருத்திற்கேற்ப எதையும் சொன்னவன் சொன்னது போல நம்பாமல் அதை ஆராய்ந்து பாருங்கள்...

கூகுலில் இந்தியத் துணைத்தூதரகத்தின் மீதான தாக்குதல் என்று தேடினாலே அது உடனடியாக பல செய்திகளுக்கான இணைப்பை வழங்கும். எந்த செய்தி நிறுவனமும் இப்படியான ஒரு செய்தியை வழங்கவில்லை என்பது தெளிவாகும்.

மாற்றுச் சிந்தனை : சாலைகளின் மீது மின் உற்பத்திக் கூரைகள்

சூரிய மின் சக்தி திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக இருக்கும் நெடுஞ்சாலைகளின் மீது அவற்றை கூரையாக அமைத்துவிடுவது பல நன்மைகளைக் கொடுக்கும். 

முதலாவது, நமது குறைந்த நிலவளத்தை பல்நோக்குப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி அதிக பலன் பெறலாம். 

இரண்டாவது, சாலைகளின் கற்களும் தாரும் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி சுற்றுப்புரத்தைச் சூடாக்குகின்றன. கூரையாக சூரிய மின் தகடுகளை அமைக்கும்போது சுற்றுப்புரத்தின் வெப்பநிலை ஓரளவு குறையும்.

மூன்று, அதிக வெப்பம் வாகனங்களின் திரனை பாதிக்கும். இப்படி குறைந்த வெப்பநிலையில் வாகனங்கள் இயக்கப்படும்போது தேய்மானச்செலவுகளும் குறையும். பகல் நேர வெப்பத்தைக் குறைக்க வாகனங்களில் குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினைக் குறைக்கவும் அதனால் எரிபொருள் சேமிப்பிற்கு வழியேற்படுத்தவும் முடியும். அதோடு ஓட்டுனர்களுக்கு அதிக வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படுவது குறைவதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஒரு தேசியச் சேமிப்பிற்கு வழியமைக்கலாம்.

நான்கு, நெடுஞ்சாலைகள் நாட்டை இணைப்பதால், நெடுஞ்சாலைகளின் மேல் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை நுகர்வோருக்கு கடத்துவதும் எளிது. நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே மின்வழித்தடங்களையும் அமைக்கும்போது அதிக மின் நுகர்வு பகுதிகளான நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சாரத்தை கொண்டுசேர்க்க முடியும், இது வயல்வெளிகளின் நடுவே பெரும் கம்பங்களை அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதை விட சிக்கனமானதாக இருக்கும்.

ஐந்து, ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமாக இது இருக்கும். அதிகப்படியான முதலீடும் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிட முடியும்.

ஆறு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை இந்த திட்டத்தால் அதிகரிக்கமுடியும்.

ஏழு, தேசிய அளவில் பொறியியல் மற்றும் ககட்டமானத்தில் ஒரு புதிய மற்றும் உதிவேகமான வளர்ச்சியை இந்த திட்டத்தில் எட்டமுடியும். இந்த திட்டம் தூண்களில் நிற்கப்போவதால் காற்றையும் வெப்பத்தையும்,, மழையையும், திடீர் வாகன மேதல் விபத்துக்களையும் தாங்கி நிற்கும் திரன்வாய்ந்த கட்டமைப்பு அவசியம். இந்த திட்டத்திற்கான முனைப்பு, திட்டமிடல், ஆய்வுகள், உறுதிப்படுத்தல் என பலவும் கட்டுமானத்ததிலும் பொறியியலிலும் பல்நோக்கு திரன்வளர்ப்பிர்கு உதவும்.

எட்டு, தற்போதிருக்கும் 17,000 கிமீ நீள நான்குவழிச்சாலைகளில் 15,000 கிமீ சாலைப்பரப்பின் மீது இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 25,000 வெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதுவே இப்போது திட்டமிடலிலிருக்கும் 25,000 கிமீ நான்குவழிச்சாலைகள், நான்குவழிச்சாலைகளாக மாற இருக்கும் மாநில நெடுஞ்சாலைகள் என குறைந்தபட்சம் 50,000 கிமீ பரப்பில் எதிர்காலத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். சூரிய மின்சார தொழில் நுடபம் வளரும்போது இந்த உற்பத்தியளவு அதிகரிக்கவும் செய்யும்.

ஒன்பது, சூழல் மாசுபடுவதை பெருமளவில் தடுக்க முடியும்.

இது அதிக செலவு பிடிக்கும் திட்டம். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருந்திடும். இன்றை நிலையில் இப்படியான திட்டங்களை விட வரண்ட விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதே சிறந்தது. ஆனால் அவை இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவே பயன்படும். எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்போது இவை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். அப்போதுதான் நமது இடநெருக்கடியையும் நமது வாய்ப்பாக மாற்றமுடியும்.

கிரிக்கெட்டை விட்டொழித்தது நல்ல முடிவு!!!

அந்தக்காலத்துல இந்த 20-20 ஓவர் போட்டிகள புதுசா ஆரம்பிக்கப்போறாங்கனு செய்தி வந்தப்பவே கிரிக்கெட் பாக்கறதுல இருந்து நான் விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டேன்... இந்த ஐபிஎல் கருமம் வந்தப்ப கிரிக்கெட்ட என் வாழ்க்கையிலயிருந்தே தூக்க முடிவு பண்ணேன்... நான் முந்திக்கிட்டேன்... இன்னைக்கு நிறையபேர் அத ஏன் பாக்கிறோம்னு வருத்தப்படுறது கேக்குது... 

அது ஒரு வீணாப்போன விளையாட்டுங்க மக்களே... அந்த சூதாட்டத்தப் பாத்து உங்க நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காம பொழைக்கப்பாருங்க...

அன்னைக்கே இந்த கிரிக்கெட் பாக்கறதுல இருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டது எவ்வளவு நல்ல முடிவு!!!

இருநூறுரூபாவும் துடைக்கப்பட்ட களங்கமும்!!!

ஆனா பாருங்க.. அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்ட எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிட்டுத்தான் ஓட்டுப்போட்டாங்களாம்... 

நானும் அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்டவன்தான்... அப்ப நானும் இருநூறு ரூபா வாங்குனேனு வச்சுக்குவோம்... 

அடடா... இப்ப நாடு இருக்க நிலையில இருநூறுங்கறது எவ்வளவு பெரிய தொகை... அத குடுத்தா யாரு குடுத்தாங்கனு பாக்காம, அவங்க சின்னத்த மட்டும் நினைவு வச்சிக்கிட்டு பாஞ்சு போய் ஓட்டுப்போடலாம்... 

ப்படிப்பாஞ்சு போறது?? நான் பெங்களூர்ல இருக்கேன்... என் வாக்குச்சாவடி நீலகிரித்தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்துல இருக்க இக்கரைநெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட கெஞ்சனூர் அரசுப்பள்ளியில இருக்கு.... ஆனாலும் பாஞ்சு போய்த்தானே ஆகனும்!!! இருநூறு ரூபா குடுத்துட்டாங்களே...

இருந்த இடத்துல இருந்து அப்படியே பாய நானென்ன அனுமனா இல்ல சூப்பர்மேனா?? நான் இருநூறு ரூபாவுக்கு லாட்டரி அடிக்கிற தமிழன்ல... அதனால உடனே பெங்களூர்ல இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் பேருந்துல பயனச்சீட்ட முன்பதிவு பண்றேன்... விலை 400ரூபா... கோயம்புத்தூருல இருந்து சத்திக்கு அரசுப்பேருந்து... விலை முப்பது ரூபா... இதுல வயித்துக்கடுப்பு வேற... இடையில மூனு வாட்டி...

வீட்டுக்குப்போயி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு (நான் இருநூறுக்கு வக்கத்த தமிழன்... உடம்பு அவ்வளவு ஊக்கமாயில்ல) சாப்பிட்டுட்டு (அன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு சாப்பாட எங்க வீட்டுல யாரும் சாப்பிடல, அன்னைக்குத்தான் எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிருப்போம்ல) குடும்பமே போய் ஓட்டுப்போட்டோம்...

யாருக்குப்போட்டோம் அப்படிங்கறத விட, யாருக்கு எதிராப்போட்டோம்னு கேளுங்க... நாங்க என்னதான் இருநூறுக்கே வக்கத்த தமிழனா இருந்தாலும் தமிழினத்த சார்ந்த ஒருத்தர், பெரும் புரட்சியெல்லாம் பண்ணி 176000,00,00,000 ரூபாவ (சத்தியமா அது இருநூறு ரூபாவ விட பெரிய தொகைதான்) இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நட்டப்படுத்தி, உலக வரலாற்றுலையே (வெள்ளக்காரன் நம்மகிட்ட தோத்தது இந்த ஒரே ஒரு விசயத்துலதானு சொன்னாங்க) இப்படியொரு புரட்சி நடந்ததில்லை, நடக்கப்போறதில்லைனு சொல்ற மாதிரி ஒரு பிரம்மாண்டப் புரட்சி செஞ்சவருக்கு எதிராத்தான் சத்தியமா ஓட்டுப்போட்டோம்....

அதெப்படிங்க??? 176000,00,00,000 புரட்சிபண்ணிட்டு இருநூறுக்கு வக்கத்த தமிழனுங்க மத்தியில அவரு போட்டியிடலாம்??? எங்களுக்கெல்லாம் அதுல பங்கா தலைக்கு ஒரு இருநூறு குடுத்திருந்தா அவருக்கு போட்டிருக்கமாட்டோமா??? இந்த மாதிரி எங்களுக்குப் பங்கு கொடுக்காம அவரு மறுபடியும் தன் சாதனைய தானே முறியடிச்சுட்டாருனா??? அதனாலதான் அவருக்ககு எதிரா ஓட்டுப்போட்டோம்...

ஓட்டுப்போட்டாச்சு... வீடே பஞ்சத்துல இருந்து விடுபட்டுடுச்சு, இருநூறு வாங்கியாச்சுல!!! இனி பெங்களூருக்கு போகனும்ல... அதுக்கும் ஒரு தனியார் பேருந்துல முன்பதிவு... இப்ப குளு குளுனு குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து... அதுக்கு செலவு 600!! பெங்களூர் போயாச்சு... அங்கயிருந்து தங்கியிருக்க இடத்துக்குப்போக பயனச்செலவு 60... ஆக மொத்த செலவு 400+30+600+60=1090ரூபா... ஆனாப்பாருங்க, 200>1090!!! இதுதான் அவங்க கணக்கு...

ஆனா இருநூறு வாங்கியிருந்தாக்கூட வராத மகிழ்ச்சி, அவரு தோத்துட்டாருனு செய்தி பாத்தப்போ வந்துச்சு... எங்க தொகுதிதான் பாரதத்துக்கு 176000,00,00,000 நட்டப்படுத்துன தொகுதிங்கற அவச்சொல்ல இருநூறுரூபா கூலி வாங்கி இப்ப துடைச்சிருக்கோம்... !!!

Friday, 9 May 2014

நதிநீர் இணைப்பெனும் கானல் நீரும், உள்ளூர் நீர் வழி மேம்பாடு எனும் அட்சய பாத்திரமும்..

முதல் படம்.. பாரதத்தில் நதிகளை இணைக்கும் திட்டம்...
அது தேவையற்ற, வீண் செலவு வைக்கும், பிரம்மாண்ட ஊழல்களுக்கு வித்தாகும், சூழலைக் கெடுக்கும் திட்டம்... இந்த வரைபடத்திலிருக்கும் கோடுகளை வரைந்தவருக்கு பரதகண்டத்தின் புவியியல் என்றால் என்னவென்பதே தெரியாதென நினைக்கிறேன்....
2006-2007ல் கனமழை பெய்த பொழுது காவிரியில் வீணாக கடலில் கலந்த நீரின் அளவு மட்டும் 30-40 டிஎம்சி... பவானியில் வீணாக சென்று காவிரியில் கலந்தது சுமார் 5 டிஎம்சி நீர்... இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் பருவமழை சரியாகப் பெய்யும் ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தபட்சம் 20 டிஎம்சி தண்ணீராவது கடலில் வீணாக கலக்கிறது... அந்த உபரி நீரை நாம் சேமித்தாலே தமிழகத்தில் முப்போகம் விளைவிக்க முடியும்...
பவானிசாகர் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் வீணாக காவிரியில் போய் கலந்தாலும் கலக்கும் ஆனால் பண்ணாரியிலிருந்து வடகிழக்காக மேட்டூர் வரையிலுமுள்ள பல சிறிய அணைகளுக்கோ அல்லது திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கும் பிரம்மாண்ட ஏரிகளுக்கு அந்த நீர் போகாது... இந்த நிலையில் நாம் கங்கை நீரை கொண்டு வந்து என்ன செய்யப்போகிறோம்???

அடுத்து வரும் படங்களில், பவானிசாகர் அணைக்கட்டுக்கு அருகிலிருக்கும் (அருகிலென்றால் ஒரு முப்பது கிமி க்கும் குறைவான தூரத்தில்) வரண்டே கிடக்கும் பெரிய ஏரிகள்.

முதலில் நல்லூர் ஏரி.

கோவை - சத்தியமங்கலம் சாலையில், புஞ்சைப் புளியம்பட்டி தாண்டியதும் வரும் ஊர் நல்லூர். இந்த ஊரிலிருக்கும் ஏரியானது பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கிறது.



இரண்டாவது, புங்கம்பள்ளி ஏரி. 

கோவை - சத்தியமங்கலம் சாலையில் நல்லூருக்கு அடுத்தபடி வரும் ஏரி... பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கிறது.
மூன்றாவது, அன்னூர் ஏரி. 

கோவை - சத்தி சாலையில் வரும் முதல் பெரிய ஊர். அன்னூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஒரு பெரிய வரண்ட ஏரி இருக்கிறது... அருகிலிருக்கும் பேருந்து நிலையத்தைப் போல பல மடங்கு பெரிய ஏரி...


கடைசிப்படம், பவானிசாகரும் அந்த (2-4 படங்களில் காட்டப்பட்டிருக்கும்) ஏரிகளும் அமைந்திருக்கும் இடம்.


பவானிசாகர் அணையிலிருந்து புங்கம்பள்ளி மற்றும் நல்லூர் ஏரிகள் இருபது கிமி க்கு குறைவான தூரத்திலும், அன்னூர் ஏரி நாற்பது கிமி க்கு குறைவான தூரத்திலும் இருப்பது இந்த கூகுல் எர்த் வரைபடத்தில் தெரிகிறது.. 

இவ்வளவு அருகிலிருந்தும் இந்த மூன்று பெரிய ஏரிகளும் வரண்டே கிடப்பது எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு??? எத்தனை ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன... எத்தனை ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் வரட்சியினால் தங்கள் நிலங்களை வணிகர்களுக்கு விற்றுவிட்டு நகரங்களுக்கு பெயர்ந்திருக்கும்...

ஆறு அங்குல குழாய்களை என்பது கிமி தூரத்திற்கு பதித்து இந்த ஏரிகளை நிரப்ப முடியாத நாம் கங்கையையும் காவிரியையும் இணைப்பது பற்றி பேசியும் என்னாகப்போகிறது???

இந்த ஏரிகள் நிரம்பிட வழியும் நீர் அவற்றின் கிளை வாய்க்கால்களில் பாய்ந்து இன்னும் எத்தனையோ ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிடும்... 

இவ்வளவு பெரிய அணையை பக்கத்தில் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய ஏரிகளை நாம் வரல விட்டிருக்கிறோம்... ஒரு ஏரி நிரம்பினால் அதிலிருந்து பிரியும் கால்வாயில் நீரோடி அடுத்த ஏரியை நிரப்பும்.. அதிலிருந்து அடுத்தது என ஒரு தொடர் கன்னியாக இயற்கையாக இணைப்புகள் இருந்தன. அப்பா அடிக்கடி சொல்வார் அந்த இணைப்புச் சங்கிலி காவிரிக்கரை வரையிலும் நீழும் என்று...  

அந்த இயற்கையை நாசப்படுத்திவிட்டு, பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து கங்கையின் தண்ணீரை, பிம்மபுத்திராவின் தண்ணீரை காவிரிக்கும் வைகைக்கும் கொண்டு சேர்க்க துடித்துக்கொண்டிருக்கிறோம்... தண்ணீர் கொண்டு வர பிரயத்தனம் செய்கிறோம்...

Tuesday, 22 April 2014

3-D printing எனும் அற்புத விளக்கு..

அலாவுதீனின் அற்புத விளக்கிளிருந்து வெளிவரும் பூதம் கேட்பதையெல்லாம் கொடுக்குமாம் - நாம் திரையில் பார்த்த கதைகளில் படித்த பழங்கதை...

மணிதன் புதிதாக (மேற்குலகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவணம் செலுத்தி வருகிறது) கண்டடைந்திருக்கும் அலாவுதீன் பூதம் தான்,

3D printing (இனி, உயிர் வடிவ அச்சாக்கி.. வேறு தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தொழில்நுட்பம்... நாம் வேண்டிய பொருளை நாம் வேண்டும் வடிவத்தில் உருவாக்கிட உதவும்...

அதனோடு Artificial Intelligence (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) சேரும் பொழுது, மணிதன் படைப்பின் உச்சங்களைத் தொட்டிருப்பான்...

இத்தொழில்நுட்பங்கள் முதிர்வடைந்து, அவற்றின் விலை குறையும் பொழுது தொழிற்சாலைகளின் தேவை அற்றுப் போய்விடும்... நாம் தேவையான மூலப்பொருள்களை வாங்கி நமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருப்போம்... அதோடு, தொழில் முனைவர்களுக்கு தேவையற்ற அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதையும், உற்பத்தி செய்ததை சேமிக்க வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துவிடும்...

யோசித்துப் பாருங்கள்,

உதாரணம் 1)

இப்பொழுது ஒரு வீடு மாற்றும் பொழுது எத்துணைப் பொருட்களைச் சுமந்து அழைய வேண்டிசயள்ளது? எதிர்காலத்தில் நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொக்கிசங்களையும் ஒரேயொரு உயிர் வடிவ அச்சாக்கியையும் மட்டும் நம் மகிழுந்தில் எடுத்துப் போட்டுக் கொண்டு, உலகின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறலாம்... பின் நமக்குத் தேயைான பொருட்களையும் இயந்திரங்களையும் நாமே உறுவாக்கிக் கொள்ளலாம்...

உதாரணம் 2)

ஒரு மிதிவண்டி அல்லது வாகன பிழை நீக்குநர் (repair mechanic - சரியான தமிழ் பதம் தெரிந்து சொல்வோருக்கு முன்வைப்பாக நன்றி), ஒரு உதிரிபாகத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தேவைப்படும் பாகத்தின் வரைபடத்தை உற்பத்தியாளரின் websiteலிருந்து (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தரவிறக்கம் செய்து தாங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம்...

உதாரணம் 3)

ஒரு மருத்துவமணையில் அவசரமாகத் தேவைப்படும் பொருட்களுக்கோ இயந்திரங்களுக்காகவோ எந்தவொரு உயிரும் பலியாகத் தேவையில்லை எனும் நிலை வந்துவிடும். உறுப்பு மாற்று அறுவை சகிச்சைகளுக்கான உறுப்பு தாணம் தருவோரை தேடி அழையத் தேவையில்லை...

உதாரணம் 4)

யுத்தகளத்திலிருக்கும் வீரர்கள் தோட்டாவோ அல்லது உதறிபாகங்களோ முடிவதைக் கண்டுகொள்ள வேண்டிய தேவையற்றுப் போகும். களத்தின் சூழ்நிலைக்கும் தேவைக்கும் தகுந்த ஆயுதங்களையும் உற்பத்தி செய்துகொள்ளும் நிலை வந்திருக்கும்.

உதாரணம் 5) இது தான் ஆபத்தானது,

தீவிரவாதிகள் வெடிபொருட்களையோ, ஆயுதங்களையோ தூக்கிச் செல்லும் தேவையிருக்காது.. மாற்றாக, தாங்கள் அழிக்க நிணைக்கும் இடத்திலேயே ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை திருடினால் போதும்... மேற்கொண்டு நடக்கவிருப்பதைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை...

உதாரணம் 6)

தேவையான சில்லரையை அச்செடுத்துக் கொள்ளலாம்... இனி எல்லா பேருந்து நடத்துனர்களும் தங்கள் தோளில் ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை மாட்டிக் கொண்டு நமக்கு சரியான சில்லரை வழங்குவார்!!!

நமது அரசாங்கம் இப்பொழுதே தேவையான வழிகாட்டு சட்ட வரைவுகளை உருவாக்கிட முனைய வேண்டும்...

மோலும் படித்தும் பார்த்தும் பயன் பெறுங்கள்,

http://www.sciencedaily.com/releases/2013/07/130729144622.htm

http://www.sciencedaily.com/releases/2011/11/111129185923.htm

https://www.youtube.com/watch?v=pQHnMj6dxj4

https://www.youtube.com/watch?v=G0EJmBoLq-g

http://en.wikipedia.org/wiki/3D_printing

http://www.explainingthefuture.com/3dprinting.html

http://mashable.com/category/3d-printing/

தமிழில் காதலிப்போம்...

தமிழில் காதலிப்போம்...

என்னுயிர்த் தோழி, உன்னை முதலில் பார்த்தவுடனே என்னுள் ஓர் அழகிய உனர்வு... ஏதென்று யோசித்த பொழுதெல்லாம் நீயென்றே புரிந்தது...


எவ்வளவோ நாளாக உன்னிடம் சொல்ல முடியாமல் தவித்து, உன்னோடு கனவிலே வாழ்ந்து வந்தேன் ... அது ஒரு அழகான வாழ்க்கை... இவ்வளவு நாளாக உன்னை விட்டு நான் மட்டும் அந்த அழகையெல்லாம் தனியாக அனுபவித்து சுயநலமாக வாழ்ந்துவிட்டேன்...

போதும், சொல்லிவிடுகிறேன்,

உன்னை நான் காதல் செய்கிறேன்...

என்னோடு நீ சேர்ந்து நாமாக நாம் வாழ வருவாயா???

உன்னை உயிரில் வைத்து நேசிக்கும், காதலன்!!!

என்னுளுதித்த அருமையான வாழ்வியல் கருத்து...

Many times in my life I have failed... when other persons declared me a failed case in their perspective and in their metrics... 
Few times in my life I have failed... those failures were when i let myslf down...
Few times in my life I have won, when somebody declared I have won, because they found me meeting their expectations and scoring better in their metrics...
Many times in my life I have won, when I surpassed my own expectations and benchmarks...

Still I keep loosing and winning...
I dont cry when I fail, yet I do cry when I fail myself...
I dont smile when I win, yet i do take celebrate my own victories...

காக்கை நோக்கறியும், கொக்கு டப்பறியும் - தமிழர் பறவையியல்

நாம் சிரித்துவிடும் சில சொற்றொடர்கள், ஆழ்ந்து கவனித்தால் அவை நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவின் தொகுப்புகள் அவையென புரியும்...

எடுத்துக் காட்டாக,

நம்மவர்களின் பறவையியலை பறைசாற்றும் ஒரு தொடர்..

"காக்கை நோக்கறியும், கொக்கு டப்பறியும்"

காக்கையை நாம் பார்த்தாலே போதும், அது பறந்துவிடும்... அவ்வளவு உன்னிப்பாக தன் சுற்றுப்புறத்தை தன் கருத்தில் வைத்திருக்கும்... 

கொக்கு தான் கொண்ட வேலையில் முழுக் கருத்தையும் வைத்து தானிருக்கும் சூழலை மறந்துவிடும்...

இது எவ்வளவு ஆழ்ந்த கவணிப்பில் பிறந்த சொற்றொடர்...

இந்தியப் பறவையியலின் பொற்க்காலம் ஜகாங்கிரின் ஆட்சி என்றொரு கருத்து நிலவுகிறது... ஆனால் தமிழனின் அறிவு அதற்க்கும் மூத்தது, நாம் நம்முடைய தாழ்வுணர்ச்சியை கைவிட்டு தமிழை ஆய்வு செய்து கண்டுணர வேண்டியது கடலளவு இருக்கிறது...

Germans and the World war II

The greatest irony of world war 2 is, three of the greatest american generals of the war, general Dwight Eisenhover, admiral Nimitz and Marshall Carl "Tooey" Spatz are Americans of German origin!!!

When Germans of Germany were all mouths "heil Hitler", Germans of the USA would apparently said "Hell to Hitler"... 

And Einstein just helped the americans with Nukes!!! 

Poor Hitler!!!

Nirranj

வருமுன் காத்தலின் அவசியம்

நாம் வருமுன் காத்தலின் அவசியத்தை மறந்து போனோமா???

சில நாட்களுக்கு முன் ஒரு இளம்பெண் மும்பை நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் கற்பழிக்கப் படுகிறார்...

சீனாவின் அபரிமித வளர்ச்சியும் அமரிக்காவையே எதிர்க்கத் துனியும் அதன் தன்னம்பிக்கையும் நமக்கு இருபதாண்டுகள் மெதுவாக உறைத்ததன் காரனமாக இன்று அவசர அவசரமாக நமது எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியும், புதிய மற்றும் திறன்மிகு ஆயுதங்களையும் வாங்கியும் அவர்களுக்கும் நமக்குமான படைத்திறன் இடைவெளியை இட்டு நிரப்ப முயன்று கொண்டிருக்கிறோம்...

மேற்சொன்ன இரு சம்பவங்களும் நமக்கு புதிதாக நடைபெற்ற விசயங்கள் கிடையாது... கடந்தாண்டு டில்லியில் நடந்த கற்ப்பழிப்பு சம்பவம், ஒதுக்குப்புறமான இடங்களில் பெண்களுக்கு உள்ள பாதுகாபின்மையை முகத்திலறைந்து சொன்னது...
1962 ஆம் வருடம் வடயெல்லையில் சீனா அத்துமீறிய போதும், 1998 கார்கிலில் நிகழ்ந்த பாகிஸ்தானிய அத்துமீறலின் போதும், 2001ல் பாராளுமன்றம் தாக்கப் பட்ட பின் நமது படைகளை எல்லையில் கொண்டு சேர்க்க (operation parakram) நாம் திண்டாடியதும் நமக்கான பாடங்களை கற்றுக்கொடுத்தன..

ஆனால் இவற்றிலிருந்து நாம் ஏதும் பாடம் படித்ததாகவோ, அல்லது நமது நிலைத்துவிட்ட வந்தால் பார்த்துக்கொள்வோம் என்ற மன நிலையில் மாற்றம் வந்ததாகவோ தெரியவில்லை...

வங்கக்கடல் சுனாமியோ, ஒடிஷாவை வருடம் தவராமல் புரட்டிபோடும் சூறாவளியோ, பிகாரிலும் அசாமிலும் வருடம் தவராமல் கரையுடைத்து மக்களின் வாழ்வருக்கும் ஆறுகளின் சீற்றமோ நமக்கு உத்திராகண்டின் சூழல் சமனிலையின் இன்றியமையாத் தேவயை உணர்த்தவில்லை, அங்கு வரம்பிர்க்குள் வைக்கப்பட்டிருக்க வேண்ன்டிய கட்டமைப்புகளின் அவசியத்தையும் உனர்த்தவில்லை...

கருநாடகத்திடம் தன்னீருக்காக சட்டப் போராட்டம் நடத்தும் நாமேதான் உபரியாக வந்த நீரை சில நாட்களுக்கு முன் கடலில் வீணாக்கினோம்...

பண்டிகை நாட்களில் பேருந்துகளுக்கான தேவை, பருவமழை பொய்த்தால் வரும் பஞ்ச காலத்திற்கான உணவுதானிய தேவை, பாதுகாப்பற்ற மாணவர் போக்குவரத்து, மழைக்காலங்களில் சகதியாகும் நகரங்கள், ஆளில்லா ரயில்-சாலைச் சந்திப்புகளில் நிகழும் மரணங்கள் என பட்டியல் நீள்கிறது...

நாம் நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டிய இந்த இன்றியமையாக் குனத்தின் தேவைகளையும், செய்யவேண்டிய, மாற்றவேண்டிய எதைப்பற்றியும் சொல்லாடுவோம்...


-Nirranj

பெண்களுக்கு அடக்கம் வேண்டும் :)

பெண்களின் அடக்கத்தில் தான் ஒரு குடும்பத்தின், சமுதாயத்தின் கவுரவம் கட்டப்பட்டிருக்கிறதா?? 
பெண் என்பவள் என்று ஒரு சக மனிதராக, தனக்கென ஒரு வாழ்வியல் சுதந்திரம் கொண்ட மனிதராக வாழ முடிகிறதோ, அப்பொழுது தான் ஒரு சமுதாயம் உண்மையில் முன்னேறும் சமுதாயமாக மாறும்...

ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வேலைக்குப் போவதே ஒரு பெரும் எல்லை மீறலாக இருந்தது.. ஆனால் இன்று பல துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்...

நான் சம்பாதிப்பதைப் பற்றிப் பேசும் பொழுது, பெண்களை சம்பாதிக்க அனுப்பும் நாம், அவர்களின் பணம் வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் அவர்களின் சுய சிந்தனை என்று வரும் பொழுது மட்டும், ஏதோ ஒரு மிகப்பெரும் பாவச் செயலை அவர்கள் செய்வதாகப் பதறுகிறோம்???

அவர்கள் புகைபிடித்தால் உடனே அதை புகைப்படம் எடுத்து, அந்த படத்திர்க்கு "குடும்பக் குத்துவிலக்குகள்" என்று தலைப்பிட்டு அதை பகிர்ந்துகொள்கிறோம்... அதே ரஜினி ஒரு படத்தில் சுருட்டை தூக்கி வீசி நிபுணமாக வாயில் கவ்வினால் அதைக் கைதட்டி கொண்டாடுகிறோம்...

பெண்கள் தன்னியடித்தால் அவ்வளவுதான்...
பெண்கள் சில பசங்களுடன் சிரித்துப் பேசினால்?? அவ்வளவுதான், சொல்லப்படும் வார்த்தைகளை அச்சிலேற்ற முடியாது...

ஒரு ஆண் திருமனம் செய்ய மறுத்தாலோ அல்லது தான் கொண்ட ஏதேனும் கடமையை முடிக்க வேண்டி சில காலம் திருமனம் வேண்டாம் என்றாலோ அதை மெச்சிக் கொண்டாடும் நாம், ஏனொரு பெண் திருமனத்தை வேண்டாம் என்றாலோ, அல்லது சில காலம் அவகாசம் கேட்டாலோ உடனே, அவர்களுக்கு ஆயிரம் உபதேசங்களைக் கொட்டிக் குடுக்கிறோம்???

அதென்ன பெண்கள் திருமனத்திற்க்குப் பிறகு ஆண்களுக்கு சமையல்காரிகளா?? அவர்கள் வேலைக்குப் போனால், உடனே கனவன் பட்டினி கிடப்பதாகவும், இவர்கள் ஏதோ ஊர் சுற்றுவதாகவும் கற்பனைகள் குதிரையேறி விடும்... அதில் ஆண்களுக்கு பிரச்சினை வருகிறதோ இல்லையோ, அவனது அம்மாவுக்கோ, சகோதரிகளுக்கோ ஆயிரம் பிரச்சினைகள் வந்து விடுகிறது???

ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் விருப்பத்திற்க்கு அவளைப் போன்ற இன்னொரு பெண் துனை நின்றாலே, பாதித் தொல்லை முடிந்துவிடும். ஆனால் பெண்களுக்குள் என்னதான் பிரச்சினை என்று எனக்கும் தெரியவில்லை, பல நேரங்களில் பெண்களுக்குகும் புரட்சிக்கும் குறுக்கே இன்னொரு பெண் தான் நிற்பதாக நான் நினைக்கிறேன்...

ஒபாமாவின் பல்லைத்தட்டிய பிரமோஸ் ஏவுகணை!!!

செய்தி : அமெரிக்கா ஒலியை விட 3 மடங்கு வேகமாக சென்று துல்லிய்மாக இலக்கைத் தாக்கும் எவுகனையை உருவாக முயற்ச்சிக்கிறது..

ஒபாமா மன்மோகனிடம்,

"என்ன மேன்மோகன், அமெரிக்கா வரைக்கும் வந்துட்டீங்க, அப்படியே எங்க ஏவுகனை ஒரு ரெண்ட வாங்கிட்டுப் போங்களேன்!!! பாகிஸ்தான்ல நவாஸ் சரீப்போட கட்டிலத் தூக்க சொன்னாக்கூட தூக்கிரும்" !!

மன்மோகன், 

ஓ அப்படியா, நேத்து ஏதோ உங்க பல்செட் காணாமப் போயிருச்சுனு சொன்னீங்களே என்னாச்சு???

ஒபாமா,

அட ஆமாங்க.. காலைல வழக்கம் போல எழுந்து பல் செட்டக் கழட்டி நல்லா தேச்சுக் கழுவி தொடைச்சி வாயில மாட்டுனேன். அப்படியே பளீச்சுனு இருக்கானு பாக்க வாய தொறந்தேன், அப்ப ஒரு நொடி கண்ண மூடித் தொறந்தேன் பாருங்க, என்ன ஆச்சரியம்!! பல்செட்டக் காணோம்!! நான் அப்படியே சாக் ஆகிட்டேன்!!

மன்மோகன் தான் கொண்டு வந்த பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு பல் செட்டை காட்டுகிறார்,

ஒபாமா,

அட!! இது என்னோடது மாதிரியில இருக்கு!?!?!?

மன்மோகன்,

உங்களுது தான், எங்க பிரமோஸ் கிட்ட உங்க பல் செட்ட தூக்க சொன்னோம், தூக்கிடுச்சு!!!

ஒபாமா : $%£$%!!????/\\/©®¥¥¥²®²³©

மன்மோகன் : எங்க கிட்டயேவா!!

-Nirranj

The optimist and the pessimist - India's attitude towards Pakistan..

As far as India-Pakistan relations are concerned, We exhibit a dual attitude. One that of a optimist and the other that of a pessimist.

The optimist,

We think that one day Pakistan will take a U-turn and will become a more responsible state, a state that sees India as a progressive neighbor and a partner with common background. This optimist was responsible for surrendering those glorious opportunities we had to change Pakistan. opportunities including the victory in 1971 war, Kargil incident, the parliament attack and even the arresting of Ajmal Kasab, or those many incidents whe their BAT's cross the border and assault our patrols (the recent beheading of our soldiers). Many of our leaders from Nehru, Sashtri, Indira, Vajpayee and recently MMS, let the hard earned opportunities to go off.. they always thought that India is a peace loving nation, and always thought that Our positive action will one day strike the otherwise clever Pakistani heart... I use clever, because, they think what possibly could give them a break to recuperate and hit India again.

The pessimist,

We many time think that we cannot afford to strike Pakistan, with either vengeance or either with the right obligation ensured by justice. We think that either we are not capable of hitting back, or we think that the world "may" brand us as a aggressor. But the world respects the state which attacks to save its sovereignty, eg., the Israel. We tend to under estimate our strengths and always uphold our weaknesses... we think that our army is solely for defense and we should never cross our borders as invaders... we are living in some difficult situations, which is even demanding the Japanese to revisit their military doctrine to defend a bunch of rocks in the pacific... And we also think that with our growing might we should act "responsibly" in our neighborhood, even when others constantly bully us... from pakistan to Srilanka, our neighbors think they can over run India if they strike at the right time.. Yet the pessimist in us will bind us from even using strong words, fearing that the neighbor may turn into a foe, when they are betrayers already...

High time to change our attitude or we may well end up the rubble, which is what our neighbors are striving to make us.

Nirranj