Friday, 18 April 2014

பெண்ணியமும் குடும்பமும்-3

பெண்ணின் திருமனம் இன்றும் நிர்பந்தத்தின் பேரில் நடப்பது வருத்தத்திற்குரியது. இதை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். இதன் பின்னால் இருக்கும் பொதுப் புரிதல்களையும் பார்க்க வேண்டும். அவற்றைப் புரிந்து கொண்டால்தான் இதற்கான விடைகளையும் பெண்களுக்கு அவர்களின் திருமனம் குறித்த விடுதலை அல்லது உரிமையை நிலைநாட்ட முடியும்.

இன்று பல பெண்கள் படிக்கவும் வேலைக்குப் போகவும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு குடும்பத்தைக் காக்கும் (பொருளாதார ரீதியாக) பொருப்பு இருப்பதாக பலரும் நினைப்பதில்லை. பெண்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றி பலரும் அலட்டிக் கொள்வதில்லை. பெண்களைக் குடும்பப் பொருளாதாரத்தி்ற்கு பயன்படுத்திக் கொள்ள பலரும் நினைப்பதில்லை. இவை ஒரு காரனம்.

இரண்டாவது, பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது. இதுவும் ஒரு காரனம். இன்று அறிவியல் பெண் குழந்தை பெற்றுக் கொள்ள சரியான வயது 29க்குள் என்கிறது. இதனாலும் பல வீடுகளில் தங்கள் பெண்ணின் குழந்தைப் பேரு குறித்த கவலை வந்துவிடுகிறது.
அப்படிக் குழந்தை பெற்றுக் கொண்டாலும் அந்தக் குழந்தையை வளர்க்க அவர்களின் உடல் ஒத்துழைக்க வேண்டும். இதுவும் அவ்களைப் பெற்றவர்களுக்கு ஒரு அச்சத்தைத் (தங்கள் பெண்ணின் மற்றும் பேரப் பிள்ளைகளின் நல்வாழ்வு குறித்த) தருகிறது.

சமுதாயக் காரணிகள். பலரும் தங்கள் பெண்களின் நல்வாழ்வை தங்களது குடும்பத்தின் வளமையின் குறியீடாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் பெண்களைக் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு வலு சேர்பதற்கு அனுமதிப்பதில்லை. பொதுவிடங்களில் பெண்ணைப் பெற்றோரைப் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வியே பெண்ணுக்கு எப்போது திருமனம் என்பதுதான். இப்படியான கேள்வி பெண்ணுக்கு 18 ஆன உடனே வந்தவிடுகிறது. ஆனால் இன்றைய பெற்றோருக்கு 25 வயது வரை சாக்கு சொல்லும் வாய்ப்பு இருக்கிறது. பெண் படித்து முடிக்கட்டும் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் பெண் படிப்பை முடித்துவிட்டால், பின் மீண்டும் அந்த கேள்வி வந்துவிடுகிறது. இப்பொழுதுதான் பெண் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் அவளது வேலையில் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது. அதற்குள் என்ன திருமனம் என்று பல பெற்றோர் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள், ஆனால் உடனே வரும் எதிர் கேள்வியான, அவள் சம்பாதித்து தான் நீங்கள் சாப்பிட வேண்டுமா? என்பதற்க்கு பலருக்கும் பதில் சொல்ல வருவதில்லை. காரனம் பெண் கொண்டு வரும் பணத்தில் குடும்பம் நடத்த பல தந்தைமார்கள் ஒப்புக் கொள்வதில்லை அல்லது வெட்கப்படுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது பல பெண்கள் மட்டுமே பெற்ற வீடுகளில் நிலைமை சற்று மாறிவருகிறது. பல பெண்கள் தங்கள் பெற்றோர்களைக் காக்கும் பொருப்பேற்கிறார்கள். சமுதாயமும் பெண் கொண்டுவரும் காசில் பெற்றோர் வாழ்வதை ஏற்க ஆரம்பிக்கிறது.
ஆனால் பெண்களின் உழைப்பில் வரும் காசும் வாழ்வதற்கு ஏற்றதுதான் என்ற எண்ணம் முதலில் பெற்றோருக்கு வரவேண்டும். அதுதான் முதல்படி. பெண்களும் தங்களின் பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் தங்ளது உழைப்பில் உதவவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அப்படியான எண்ணமே அவர்களை சம்பத்தப் பட்டவர்களின் மனதை மாற்றும் வல்லமையைத் தரும்.

பெண்களுக்கும் எப்போது திருமனம் செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதலும் வேண்டும். பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயது, குறிப்பிட்ட வயதிற்குமேல் குழந்தை பெறுவதில் இருக்கும் சிக்கல்கள், உடல்நிலை மாற்றம் முதலியன குறித்து அவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வகுப்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் திருமனம் எப்போது செய்யலாம் என்ற முடிவைத் தெளிவாக எடுக்க முடியும்.

No comments:

Post a Comment