Tuesday, 22 April 2014

வாழ்ந்துதான் பார்ப்போமே!!!

மனம் தளர்ந்திடும் நேரங்கள் மிகக் கொடுமையானவை.. அந்த நேரங்களில் நம்மை புரிந்துகொண்டவர்கள் யாராவது உடனிருப்பது நலம். மனம் தளரும் வேலையில் தனிமை மிக கொடுமையானது மற்றும் ஆபத்தானது... ஆனால் ஒருவர் தனிமையிலேயே தன்னைதானே சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி அந்த தாழ்வான நிலையை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்பதை சிந்திக்க வேண்டும்... அப்படி சிந்தித்து செயல்படுபவர்களே உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவாகிறார்கள்...

நான் தளர்வாக தாழ்வாக உணரும் போதெல்லாம் என் சிறுவயதில் என் அப்பா சொல்வது நினைவுக்கு வரும்... நான் தாழ்வாக உணரும் போதெல்லாம் அவர் சொல்வார், "இந்த உயிர் நிரந்தரம்னு நினைக்கிறியா? இல்லைல.. அடுத்த நிமிசம் இருப்போமானு தெரியாது.. ஆனா வாழ்ந்து பாக்கிறோம் தானே.. அதே மாதிரிதான் எந்த நிலமையும் நிரந்தரம் கிடையாது... நிலைமைய மாத்திக்க முயற்சி பண்ணு இல்ல நீ அதுக்கு தகுந்தா மாதிரி மாறிக்க..."

என்ன பெரிய நிலைமை?? வாழ்ந்துதான் பார்ப்போமே!!!

No comments:

Post a Comment