Tuesday, 22 April 2014

காக்கை நோக்கறியும், கொக்கு டப்பறியும் - தமிழர் பறவையியல்

நாம் சிரித்துவிடும் சில சொற்றொடர்கள், ஆழ்ந்து கவனித்தால் அவை நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவின் தொகுப்புகள் அவையென புரியும்...

எடுத்துக் காட்டாக,

நம்மவர்களின் பறவையியலை பறைசாற்றும் ஒரு தொடர்..

"காக்கை நோக்கறியும், கொக்கு டப்பறியும்"

காக்கையை நாம் பார்த்தாலே போதும், அது பறந்துவிடும்... அவ்வளவு உன்னிப்பாக தன் சுற்றுப்புறத்தை தன் கருத்தில் வைத்திருக்கும்... 

கொக்கு தான் கொண்ட வேலையில் முழுக் கருத்தையும் வைத்து தானிருக்கும் சூழலை மறந்துவிடும்...

இது எவ்வளவு ஆழ்ந்த கவணிப்பில் பிறந்த சொற்றொடர்...

இந்தியப் பறவையியலின் பொற்க்காலம் ஜகாங்கிரின் ஆட்சி என்றொரு கருத்து நிலவுகிறது... ஆனால் தமிழனின் அறிவு அதற்க்கும் மூத்தது, நாம் நம்முடைய தாழ்வுணர்ச்சியை கைவிட்டு தமிழை ஆய்வு செய்து கண்டுணர வேண்டியது கடலளவு இருக்கிறது...

No comments:

Post a Comment