Tuesday, 22 April 2014

வருமுன் காத்தலின் அவசியம்

நாம் வருமுன் காத்தலின் அவசியத்தை மறந்து போனோமா???

சில நாட்களுக்கு முன் ஒரு இளம்பெண் மும்பை நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் கற்பழிக்கப் படுகிறார்...

சீனாவின் அபரிமித வளர்ச்சியும் அமரிக்காவையே எதிர்க்கத் துனியும் அதன் தன்னம்பிக்கையும் நமக்கு இருபதாண்டுகள் மெதுவாக உறைத்ததன் காரனமாக இன்று அவசர அவசரமாக நமது எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியும், புதிய மற்றும் திறன்மிகு ஆயுதங்களையும் வாங்கியும் அவர்களுக்கும் நமக்குமான படைத்திறன் இடைவெளியை இட்டு நிரப்ப முயன்று கொண்டிருக்கிறோம்...

மேற்சொன்ன இரு சம்பவங்களும் நமக்கு புதிதாக நடைபெற்ற விசயங்கள் கிடையாது... கடந்தாண்டு டில்லியில் நடந்த கற்ப்பழிப்பு சம்பவம், ஒதுக்குப்புறமான இடங்களில் பெண்களுக்கு உள்ள பாதுகாபின்மையை முகத்திலறைந்து சொன்னது...
1962 ஆம் வருடம் வடயெல்லையில் சீனா அத்துமீறிய போதும், 1998 கார்கிலில் நிகழ்ந்த பாகிஸ்தானிய அத்துமீறலின் போதும், 2001ல் பாராளுமன்றம் தாக்கப் பட்ட பின் நமது படைகளை எல்லையில் கொண்டு சேர்க்க (operation parakram) நாம் திண்டாடியதும் நமக்கான பாடங்களை கற்றுக்கொடுத்தன..

ஆனால் இவற்றிலிருந்து நாம் ஏதும் பாடம் படித்ததாகவோ, அல்லது நமது நிலைத்துவிட்ட வந்தால் பார்த்துக்கொள்வோம் என்ற மன நிலையில் மாற்றம் வந்ததாகவோ தெரியவில்லை...

வங்கக்கடல் சுனாமியோ, ஒடிஷாவை வருடம் தவராமல் புரட்டிபோடும் சூறாவளியோ, பிகாரிலும் அசாமிலும் வருடம் தவராமல் கரையுடைத்து மக்களின் வாழ்வருக்கும் ஆறுகளின் சீற்றமோ நமக்கு உத்திராகண்டின் சூழல் சமனிலையின் இன்றியமையாத் தேவயை உணர்த்தவில்லை, அங்கு வரம்பிர்க்குள் வைக்கப்பட்டிருக்க வேண்ன்டிய கட்டமைப்புகளின் அவசியத்தையும் உனர்த்தவில்லை...

கருநாடகத்திடம் தன்னீருக்காக சட்டப் போராட்டம் நடத்தும் நாமேதான் உபரியாக வந்த நீரை சில நாட்களுக்கு முன் கடலில் வீணாக்கினோம்...

பண்டிகை நாட்களில் பேருந்துகளுக்கான தேவை, பருவமழை பொய்த்தால் வரும் பஞ்ச காலத்திற்கான உணவுதானிய தேவை, பாதுகாப்பற்ற மாணவர் போக்குவரத்து, மழைக்காலங்களில் சகதியாகும் நகரங்கள், ஆளில்லா ரயில்-சாலைச் சந்திப்புகளில் நிகழும் மரணங்கள் என பட்டியல் நீள்கிறது...

நாம் நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டிய இந்த இன்றியமையாக் குனத்தின் தேவைகளையும், செய்யவேண்டிய, மாற்றவேண்டிய எதைப்பற்றியும் சொல்லாடுவோம்...


-Nirranj

No comments:

Post a Comment