சூரிய மின் சக்தி திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக இருக்கும் நெடுஞ்சாலைகளின் மீது அவற்றை கூரையாக அமைத்துவிடுவது பல நன்மைகளைக் கொடுக்கும்.
முதலாவது, நமது குறைந்த நிலவளத்தை பல்நோக்குப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி அதிக பலன் பெறலாம்.
இரண்டாவது, சாலைகளின் கற்களும் தாரும் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி சுற்றுப்புரத்தைச் சூடாக்குகின்றன. கூரையாக சூரிய மின் தகடுகளை அமைக்கும்போது சுற்றுப்புரத்தின் வெப்பநிலை ஓரளவு குறையும்.
மூன்று, அதிக வெப்பம் வாகனங்களின் திரனை பாதிக்கும். இப்படி குறைந்த வெப்பநிலையில் வாகனங்கள் இயக்கப்படும்போது தேய்மானச்செலவுகளும் குறையும். பகல் நேர வெப்பத்தைக் குறைக்க வாகனங்களில் குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினைக் குறைக்கவும் அதனால் எரிபொருள் சேமிப்பிற்கு வழியேற்படுத்தவும் முடியும். அதோடு ஓட்டுனர்களுக்கு அதிக வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படுவது குறைவதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஒரு தேசியச் சேமிப்பிற்கு வழியமைக்கலாம்.
நான்கு, நெடுஞ்சாலைகள் நாட்டை இணைப்பதால், நெடுஞ்சாலைகளின் மேல் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை நுகர்வோருக்கு கடத்துவதும் எளிது. நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே மின்வழித்தடங்களையும் அமைக்கும்போது அதிக மின் நுகர்வு பகுதிகளான நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சாரத்தை கொண்டுசேர்க்க முடியும், இது வயல்வெளிகளின் நடுவே பெரும் கம்பங்களை அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதை விட சிக்கனமானதாக இருக்கும்.
ஐந்து, ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமாக இது இருக்கும். அதிகப்படியான முதலீடும் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிட முடியும்.
ஆறு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை இந்த திட்டத்தால் அதிகரிக்கமுடியும்.
ஏழு, தேசிய அளவில் பொறியியல் மற்றும் ககட்டமானத்தில் ஒரு புதிய மற்றும் உதிவேகமான வளர்ச்சியை இந்த திட்டத்தில் எட்டமுடியும். இந்த திட்டம் தூண்களில் நிற்கப்போவதால் காற்றையும் வெப்பத்தையும்,, மழையையும், திடீர் வாகன மேதல் விபத்துக்களையும் தாங்கி நிற்கும் திரன்வாய்ந்த கட்டமைப்பு அவசியம். இந்த திட்டத்திற்கான முனைப்பு, திட்டமிடல், ஆய்வுகள், உறுதிப்படுத்தல் என பலவும் கட்டுமானத்ததிலும் பொறியியலிலும் பல்நோக்கு திரன்வளர்ப்பிர்கு உதவும்.
எட்டு, தற்போதிருக்கும் 17,000 கிமீ நீள நான்குவழிச்சாலைகளில் 15,000 கிமீ சாலைப்பரப்பின் மீது இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 25,000 வெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதுவே இப்போது திட்டமிடலிலிருக்கும் 25,000 கிமீ நான்குவழிச்சாலைகள், நான்குவழிச்சாலைகளாக மாற இருக்கும் மாநில நெடுஞ்சாலைகள் என குறைந்தபட்சம் 50,000 கிமீ பரப்பில் எதிர்காலத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். சூரிய மின்சார தொழில் நுடபம் வளரும்போது இந்த உற்பத்தியளவு அதிகரிக்கவும் செய்யும்.
ஒன்பது, சூழல் மாசுபடுவதை பெருமளவில் தடுக்க முடியும்.
இது அதிக செலவு பிடிக்கும் திட்டம். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருந்திடும். இன்றை நிலையில் இப்படியான திட்டங்களை விட வரண்ட விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதே சிறந்தது. ஆனால் அவை இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவே பயன்படும். எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்போது இவை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். அப்போதுதான் நமது இடநெருக்கடியையும் நமது வாய்ப்பாக மாற்றமுடியும்.
முதலாவது, நமது குறைந்த நிலவளத்தை பல்நோக்குப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி அதிக பலன் பெறலாம்.
இரண்டாவது, சாலைகளின் கற்களும் தாரும் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி சுற்றுப்புரத்தைச் சூடாக்குகின்றன. கூரையாக சூரிய மின் தகடுகளை அமைக்கும்போது சுற்றுப்புரத்தின் வெப்பநிலை ஓரளவு குறையும்.
மூன்று, அதிக வெப்பம் வாகனங்களின் திரனை பாதிக்கும். இப்படி குறைந்த வெப்பநிலையில் வாகனங்கள் இயக்கப்படும்போது தேய்மானச்செலவுகளும் குறையும். பகல் நேர வெப்பத்தைக் குறைக்க வாகனங்களில் குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினைக் குறைக்கவும் அதனால் எரிபொருள் சேமிப்பிற்கு வழியேற்படுத்தவும் முடியும். அதோடு ஓட்டுனர்களுக்கு அதிக வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படுவது குறைவதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஒரு தேசியச் சேமிப்பிற்கு வழியமைக்கலாம்.
நான்கு, நெடுஞ்சாலைகள் நாட்டை இணைப்பதால், நெடுஞ்சாலைகளின் மேல் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை நுகர்வோருக்கு கடத்துவதும் எளிது. நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே மின்வழித்தடங்களையும் அமைக்கும்போது அதிக மின் நுகர்வு பகுதிகளான நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சாரத்தை கொண்டுசேர்க்க முடியும், இது வயல்வெளிகளின் நடுவே பெரும் கம்பங்களை அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதை விட சிக்கனமானதாக இருக்கும்.
ஐந்து, ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமாக இது இருக்கும். அதிகப்படியான முதலீடும் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிட முடியும்.
ஆறு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை இந்த திட்டத்தால் அதிகரிக்கமுடியும்.
ஏழு, தேசிய அளவில் பொறியியல் மற்றும் ககட்டமானத்தில் ஒரு புதிய மற்றும் உதிவேகமான வளர்ச்சியை இந்த திட்டத்தில் எட்டமுடியும். இந்த திட்டம் தூண்களில் நிற்கப்போவதால் காற்றையும் வெப்பத்தையும்,, மழையையும், திடீர் வாகன மேதல் விபத்துக்களையும் தாங்கி நிற்கும் திரன்வாய்ந்த கட்டமைப்பு அவசியம். இந்த திட்டத்திற்கான முனைப்பு, திட்டமிடல், ஆய்வுகள், உறுதிப்படுத்தல் என பலவும் கட்டுமானத்ததிலும் பொறியியலிலும் பல்நோக்கு திரன்வளர்ப்பிர்கு உதவும்.
எட்டு, தற்போதிருக்கும் 17,000 கிமீ நீள நான்குவழிச்சாலைகளில் 15,000 கிமீ சாலைப்பரப்பின் மீது இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 25,000 வெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதுவே இப்போது திட்டமிடலிலிருக்கும் 25,000 கிமீ நான்குவழிச்சாலைகள், நான்குவழிச்சாலைகளாக மாற இருக்கும் மாநில நெடுஞ்சாலைகள் என குறைந்தபட்சம் 50,000 கிமீ பரப்பில் எதிர்காலத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். சூரிய மின்சார தொழில் நுடபம் வளரும்போது இந்த உற்பத்தியளவு அதிகரிக்கவும் செய்யும்.
ஒன்பது, சூழல் மாசுபடுவதை பெருமளவில் தடுக்க முடியும்.
இது அதிக செலவு பிடிக்கும் திட்டம். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருந்திடும். இன்றை நிலையில் இப்படியான திட்டங்களை விட வரண்ட விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதே சிறந்தது. ஆனால் அவை இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவே பயன்படும். எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்போது இவை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். அப்போதுதான் நமது இடநெருக்கடியையும் நமது வாய்ப்பாக மாற்றமுடியும்.
No comments:
Post a Comment