//புல்லெட் ப்ரூப் ஜாக்கெட் டன் இருந்த ஆறு இந்திய வீரர்களிடம் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை நீங்கள் ஆப்கான் காவல்துறை உத்தரவுக்ககவோ அல்லது நேட்டோ அமெரிக்கன் படை உத்தரவுக்ககவோ காத்து இருக்க வேண்டாம், தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்துவிட்டு இன்றிரவு தன்னுடன் இரவு விருந்துக்கு வாருங்கள் என உத்தரவு இட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரகளால் கொல்லப்பட்டு விட்டனர்.//
இப்படியொரு பொய்யை சிலர் (பாஜகவினரோ அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளோ) பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவின் எந்த பிரதமரும் இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாத ஒரு உத்தரவை மோடி அவர்கள் ஆப்கானத்தில் இந்திய தூதரகங்களுக்க பாதுகாப்பளிக்கும் இந்திய திபேத் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கியதாகவும், அவர்கள் அந்த உத்தரவின்படி தூதரகத்தின் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளை கொன்றுவிட்டு நேற்று இரவு தில்லி வந்து பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு மோடி அவர்களுடன் விருந்து உண்டதாகவும் ஒரு பொய்யைப் பரப்புகிறார்கள்... இந்த பொய்யை ஆயிரம் பேர் விரும்புகிறார்கள் மற்றும் ஐநூறு பேர் பகிருகிறார்கள்...
இப்படி பொய்களை படித்தவர்கள் பரிசோதனை செய்யாமல் நம்புவது ஒருபக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது...
எந்த பொய்யையும் மக்களிடம் எளிதாக விதைக்கமுடியும் என்பதை இப்படியான வதந்திகளின் பரவல் உறுதி செய்கிறது... கனிமொழி ஜாபர்சேட்டிடம் சொன்னது போல, 70% கேனையன்கள் எதைச்சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்பது உண்மைதான் போல...
படித்த முட்டாள்களே, உங்களை நம்பித்தான் மோடி அவர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும் கனாக்கண்டு கொண்டிருக்கிறார். எதைச் சொன்னாலும் உடனடியாக அதை அப்படியே நம்பாமல், வள்ளுவப் பாட்டன் சொன்னது போல,
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளையும்,
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளின் கருத்திற்கேற்ப எதையும் சொன்னவன் சொன்னது போல நம்பாமல் அதை ஆராய்ந்து பாருங்கள்...
கூகுலில் இந்தியத் துணைத்தூதரகத்தின் மீதான தாக்குதல் என்று தேடினாலே அது உடனடியாக பல செய்திகளுக்கான இணைப்பை வழங்கும். எந்த செய்தி நிறுவனமும் இப்படியான ஒரு செய்தியை வழங்கவில்லை என்பது தெளிவாகும்.
இப்படியொரு பொய்யை சிலர் (பாஜகவினரோ அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளோ) பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவின் எந்த பிரதமரும் இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாத ஒரு உத்தரவை மோடி அவர்கள் ஆப்கானத்தில் இந்திய தூதரகங்களுக்க பாதுகாப்பளிக்கும் இந்திய திபேத் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கியதாகவும், அவர்கள் அந்த உத்தரவின்படி தூதரகத்தின் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளை கொன்றுவிட்டு நேற்று இரவு தில்லி வந்து பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு மோடி அவர்களுடன் விருந்து உண்டதாகவும் ஒரு பொய்யைப் பரப்புகிறார்கள்... இந்த பொய்யை ஆயிரம் பேர் விரும்புகிறார்கள் மற்றும் ஐநூறு பேர் பகிருகிறார்கள்...
இப்படி பொய்களை படித்தவர்கள் பரிசோதனை செய்யாமல் நம்புவது ஒருபக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது...
எந்த பொய்யையும் மக்களிடம் எளிதாக விதைக்கமுடியும் என்பதை இப்படியான வதந்திகளின் பரவல் உறுதி செய்கிறது... கனிமொழி ஜாபர்சேட்டிடம் சொன்னது போல, 70% கேனையன்கள் எதைச்சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்பது உண்மைதான் போல...
படித்த முட்டாள்களே, உங்களை நம்பித்தான் மோடி அவர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும் கனாக்கண்டு கொண்டிருக்கிறார். எதைச் சொன்னாலும் உடனடியாக அதை அப்படியே நம்பாமல், வள்ளுவப் பாட்டன் சொன்னது போல,
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளையும்,
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளின் கருத்திற்கேற்ப எதையும் சொன்னவன் சொன்னது போல நம்பாமல் அதை ஆராய்ந்து பாருங்கள்...
கூகுலில் இந்தியத் துணைத்தூதரகத்தின் மீதான தாக்குதல் என்று தேடினாலே அது உடனடியாக பல செய்திகளுக்கான இணைப்பை வழங்கும். எந்த செய்தி நிறுவனமும் இப்படியான ஒரு செய்தியை வழங்கவில்லை என்பது தெளிவாகும்.
No comments:
Post a Comment