அந்த செய்தி முதலில்,
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98076
இது சோசலிசமும் முதலாளித்துவம் கலந்தது. கார் விற்பனை நிகழ்ந்தால் முதலாளிகளுக்கு லாபம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு காரும் சம்பளம் தருகிறது. கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் (பணியாளர்களில் பெரும்பாண்மையினர்) சம்பளமானது அவர்கள் எவ்வளவு மணிநேரம் பணிபுரிகிறார்கள் என்பதைப் பொருத்தே. இப்போது ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் மாதம் 6000 கார்களையே விற்கிறது என்று வைத்துக்கொண்டால் அந்த நிறுவனத்தின் மணிக்கு 50 கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையில் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு வேலை நடந்தாலே போதும். அந்த வகையில் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாண்மையினருக்கு நான்கு நாட்களே வேலையிருக்கும். அதாவது மூன்று நாட்களுக்கான சம்பளம் கிடையாது.
இப்போது விற்கபடும் பொருட்களின் விலையில் அதற்காக உற்பத்தியாளர் கட்டும் வரியும் சேர்க்கப்படுகிறது. அதாவது ஒரு காரின் உற்பத்திச்செலவு மற்றும் உற்பத்தியாளரின் லாபம் ஆகியவை சேர்ந்து 4 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதன் மீதான உற்பத்தி வரி 12% என்றால் அதன் விற்பனை மதிப்பு இப்போது,
உற்பத்திச்செலவு + உற்பத்தியாளர் லாபம் = 400000
உற்பத்தி வரி = பொருள் மதிப்பின் மீது 12% = 48,000.
தொழிற்சாலைக்கு வெளியே பொருளின் மதிப்பு = 4,00,000 + 48,000 = 4,48,000.
இப்போது, விற்பனையாளரின் லாபத்தையும் கணக்கில் சேர்த்தால்,
விற்பனையாளர் லாபம் = தொழிற்சாலைக்கு வெளியேயான பொருளின் மதிப்பின் மீது 10% = 44,800.
இப்போது இதையும் காரின் மதிப்போடு இணைத்தால் காரின் விற்பனை விலை வரும். இப்போது,
விற்பனை விலை = 4,92,800.
இப்போது ஒருவர் அந்த காரை வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் 4,92,000 கொடுத்து அதை வாங்க வேண்டும்.
அடுத்து அந்த வாகனத்தை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய தமிழகத்தில் சாலை வரியாக 10% கட்ட வேண்டும், அந்த காருக்கு 12,500 கொடுத்து காப்பீடு செய்யவேண்டும் மற்றும் பதிவுக்கட்டணமாக 5000 செலுத்த வேண்டும்.
இப்போது,
காரின் சாலை விலை= 492000 + 49200+12500+5000 = 558700.
இதே அந்த காரின் மீதான விற்பனை வரி 12% பதிலாக 8% ஆக இருந்தால் அந்த வாகனத்தின் சாலை விலை 5,38,000 ஆக இருக்கும். அதாவது 20000 குறைவாக இருக்கும். இது குறைவான விலையாகத் தெரியலாம். ஆனால் வாங்குபவர் அந்த காரை வாகனக்கடன் பெற்று வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் செலுத்தவேண்டிய மாதத்தவணை சற்று குறையும், வாங்குபவருக்கு அதனால் 20000 லாபமெனில் அவர் அந்த பணத்தை வைத்து வேறேதாவது பொருளைக்கூட வாங்கலாம்... அந்த பொருளின் விற்பனை வேறு சிலருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும்...
இப்போது இந்த விலை குறைவதினால் அந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாதம் 1000 கார்கள் கூடுதலாக விற்றால் அதன் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு கூடுதலாக அரை நாளுக்கு வேலை கிடைக்கும், இதுதான் இந்த வரிகுறைப்பிற்கு பின்னிருக்கும் கணக்கு.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98076
இது சோசலிசமும் முதலாளித்துவம் கலந்தது. கார் விற்பனை நிகழ்ந்தால் முதலாளிகளுக்கு லாபம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு காரும் சம்பளம் தருகிறது. கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் (பணியாளர்களில் பெரும்பாண்மையினர்) சம்பளமானது அவர்கள் எவ்வளவு மணிநேரம் பணிபுரிகிறார்கள் என்பதைப் பொருத்தே. இப்போது ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் மாதம் 6000 கார்களையே விற்கிறது என்று வைத்துக்கொண்டால் அந்த நிறுவனத்தின் மணிக்கு 50 கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையில் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு வேலை நடந்தாலே போதும். அந்த வகையில் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாண்மையினருக்கு நான்கு நாட்களே வேலையிருக்கும். அதாவது மூன்று நாட்களுக்கான சம்பளம் கிடையாது.
இப்போது விற்கபடும் பொருட்களின் விலையில் அதற்காக உற்பத்தியாளர் கட்டும் வரியும் சேர்க்கப்படுகிறது. அதாவது ஒரு காரின் உற்பத்திச்செலவு மற்றும் உற்பத்தியாளரின் லாபம் ஆகியவை சேர்ந்து 4 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதன் மீதான உற்பத்தி வரி 12% என்றால் அதன் விற்பனை மதிப்பு இப்போது,
உற்பத்திச்செலவு + உற்பத்தியாளர் லாபம் = 400000
உற்பத்தி வரி = பொருள் மதிப்பின் மீது 12% = 48,000.
தொழிற்சாலைக்கு வெளியே பொருளின் மதிப்பு = 4,00,000 + 48,000 = 4,48,000.
இப்போது, விற்பனையாளரின் லாபத்தையும் கணக்கில் சேர்த்தால்,
விற்பனையாளர் லாபம் = தொழிற்சாலைக்கு வெளியேயான பொருளின் மதிப்பின் மீது 10% = 44,800.
இப்போது இதையும் காரின் மதிப்போடு இணைத்தால் காரின் விற்பனை விலை வரும். இப்போது,
விற்பனை விலை = 4,92,800.
இப்போது ஒருவர் அந்த காரை வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் 4,92,000 கொடுத்து அதை வாங்க வேண்டும்.
அடுத்து அந்த வாகனத்தை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய தமிழகத்தில் சாலை வரியாக 10% கட்ட வேண்டும், அந்த காருக்கு 12,500 கொடுத்து காப்பீடு செய்யவேண்டும் மற்றும் பதிவுக்கட்டணமாக 5000 செலுத்த வேண்டும்.
இப்போது,
காரின் சாலை விலை= 492000 + 49200+12500+5000 = 558700.
இதே அந்த காரின் மீதான விற்பனை வரி 12% பதிலாக 8% ஆக இருந்தால் அந்த வாகனத்தின் சாலை விலை 5,38,000 ஆக இருக்கும். அதாவது 20000 குறைவாக இருக்கும். இது குறைவான விலையாகத் தெரியலாம். ஆனால் வாங்குபவர் அந்த காரை வாகனக்கடன் பெற்று வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் செலுத்தவேண்டிய மாதத்தவணை சற்று குறையும், வாங்குபவருக்கு அதனால் 20000 லாபமெனில் அவர் அந்த பணத்தை வைத்து வேறேதாவது பொருளைக்கூட வாங்கலாம்... அந்த பொருளின் விற்பனை வேறு சிலருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும்...
இப்போது இந்த விலை குறைவதினால் அந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாதம் 1000 கார்கள் கூடுதலாக விற்றால் அதன் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு கூடுதலாக அரை நாளுக்கு வேலை கிடைக்கும், இதுதான் இந்த வரிகுறைப்பிற்கு பின்னிருக்கும் கணக்கு.
No comments:
Post a Comment