ஆனா பாருங்க.. அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்ட எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிட்டுத்தான் ஓட்டுப்போட்டாங்களாம்...
நானும் அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்டவன்தான்... அப்ப நானும் இருநூறு ரூபா வாங்குனேனு வச்சுக்குவோம்...
அடடா... இப்ப நாடு இருக்க நிலையில இருநூறுங்கறது எவ்வளவு பெரிய தொகை... அத குடுத்தா யாரு குடுத்தாங்கனு பாக்காம, அவங்க சின்னத்த மட்டும் நினைவு வச்சிக்கிட்டு பாஞ்சு போய் ஓட்டுப்போடலாம்...
எப்படிப்பாஞ்சு போறது?? நான் பெங்களூர்ல இருக்கேன்... என் வாக்குச்சாவடி நீலகிரித்தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்துல இருக்க இக்கரைநெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட கெஞ்சனூர் அரசுப்பள்ளியில இருக்கு.... ஆனாலும் பாஞ்சு போய்த்தானே ஆகனும்!!! இருநூறு ரூபா குடுத்துட்டாங்களே...
இருந்த இடத்துல இருந்து அப்படியே பாய நானென்ன அனுமனா இல்ல சூப்பர்மேனா?? நான் இருநூறு ரூபாவுக்கு லாட்டரி அடிக்கிற தமிழன்ல... அதனால உடனே பெங்களூர்ல இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் பேருந்துல பயனச்சீட்ட முன்பதிவு பண்றேன்... விலை 400ரூபா... கோயம்புத்தூருல இருந்து சத்திக்கு அரசுப்பேருந்து... விலை முப்பது ரூபா... இதுல வயித்துக்கடுப்பு வேற... இடையில மூனு வாட்டி...
வீட்டுக்குப்போயி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு (நான் இருநூறுக்கு வக்கத்த தமிழன்... உடம்பு அவ்வளவு ஊக்கமாயில்ல) சாப்பிட்டுட்டு (அன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு சாப்பாட எங்க வீட்டுல யாரும் சாப்பிடல, அன்னைக்குத்தான் எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிருப்போம்ல) குடும்பமே போய் ஓட்டுப்போட்டோம்...
யாருக்குப்போட்டோம் அப்படிங்கறத விட, யாருக்கு எதிராப்போட்டோம்னு கேளுங்க... நாங்க என்னதான் இருநூறுக்கே வக்கத்த தமிழனா இருந்தாலும் தமிழினத்த சார்ந்த ஒருத்தர், பெரும் புரட்சியெல்லாம் பண்ணி 176000,00,00,000 ரூபாவ (சத்தியமா அது இருநூறு ரூபாவ விட பெரிய தொகைதான்) இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நட்டப்படுத்தி, உலக வரலாற்றுலையே (வெள்ளக்காரன் நம்மகிட்ட தோத்தது இந்த ஒரே ஒரு விசயத்துலதானு சொன்னாங்க) இப்படியொரு புரட்சி நடந்ததில்லை, நடக்கப்போறதில்லைனு சொல்ற மாதிரி ஒரு பிரம்மாண்டப் புரட்சி செஞ்சவருக்கு எதிராத்தான் சத்தியமா ஓட்டுப்போட்டோம்....
அதெப்படிங்க??? 176000,00,00,000 புரட்சிபண்ணிட்டு இருநூறுக்கு வக்கத்த தமிழனுங்க மத்தியில அவரு போட்டியிடலாம்??? எங்களுக்கெல்லாம் அதுல பங்கா தலைக்கு ஒரு இருநூறு குடுத்திருந்தா அவருக்கு போட்டிருக்கமாட்டோமா??? இந்த மாதிரி எங்களுக்குப் பங்கு கொடுக்காம அவரு மறுபடியும் தன் சாதனைய தானே முறியடிச்சுட்டாருனா??? அதனாலதான் அவருக்ககு எதிரா ஓட்டுப்போட்டோம்...
ஓட்டுப்போட்டாச்சு... வீடே பஞ்சத்துல இருந்து விடுபட்டுடுச்சு, இருநூறு வாங்கியாச்சுல!!! இனி பெங்களூருக்கு போகனும்ல... அதுக்கும் ஒரு தனியார் பேருந்துல முன்பதிவு... இப்ப குளு குளுனு குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து... அதுக்கு செலவு 600!! பெங்களூர் போயாச்சு... அங்கயிருந்து தங்கியிருக்க இடத்துக்குப்போக பயனச்செலவு 60... ஆக மொத்த செலவு 400+30+600+60=1090ரூபா... ஆனாப்பாருங்க, 200>1090!!! இதுதான் அவங்க கணக்கு...
ஆனா இருநூறு வாங்கியிருந்தாக்கூட வராத மகிழ்ச்சி, அவரு தோத்துட்டாருனு செய்தி பாத்தப்போ வந்துச்சு... எங்க தொகுதிதான் பாரதத்துக்கு 176000,00,00,000 நட்டப்படுத்துன தொகுதிங்கற அவச்சொல்ல இருநூறுரூபா கூலி வாங்கி இப்ப துடைச்சிருக்கோம்... !!!
நானும் அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்டவன்தான்... அப்ப நானும் இருநூறு ரூபா வாங்குனேனு வச்சுக்குவோம்...
அடடா... இப்ப நாடு இருக்க நிலையில இருநூறுங்கறது எவ்வளவு பெரிய தொகை... அத குடுத்தா யாரு குடுத்தாங்கனு பாக்காம, அவங்க சின்னத்த மட்டும் நினைவு வச்சிக்கிட்டு பாஞ்சு போய் ஓட்டுப்போடலாம்...
எப்படிப்பாஞ்சு போறது?? நான் பெங்களூர்ல இருக்கேன்... என் வாக்குச்சாவடி நீலகிரித்தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்துல இருக்க இக்கரைநெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட கெஞ்சனூர் அரசுப்பள்ளியில இருக்கு.... ஆனாலும் பாஞ்சு போய்த்தானே ஆகனும்!!! இருநூறு ரூபா குடுத்துட்டாங்களே...
இருந்த இடத்துல இருந்து அப்படியே பாய நானென்ன அனுமனா இல்ல சூப்பர்மேனா?? நான் இருநூறு ரூபாவுக்கு லாட்டரி அடிக்கிற தமிழன்ல... அதனால உடனே பெங்களூர்ல இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் பேருந்துல பயனச்சீட்ட முன்பதிவு பண்றேன்... விலை 400ரூபா... கோயம்புத்தூருல இருந்து சத்திக்கு அரசுப்பேருந்து... விலை முப்பது ரூபா... இதுல வயித்துக்கடுப்பு வேற... இடையில மூனு வாட்டி...
வீட்டுக்குப்போயி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு (நான் இருநூறுக்கு வக்கத்த தமிழன்... உடம்பு அவ்வளவு ஊக்கமாயில்ல) சாப்பிட்டுட்டு (அன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு சாப்பாட எங்க வீட்டுல யாரும் சாப்பிடல, அன்னைக்குத்தான் எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிருப்போம்ல) குடும்பமே போய் ஓட்டுப்போட்டோம்...
யாருக்குப்போட்டோம் அப்படிங்கறத விட, யாருக்கு எதிராப்போட்டோம்னு கேளுங்க... நாங்க என்னதான் இருநூறுக்கே வக்கத்த தமிழனா இருந்தாலும் தமிழினத்த சார்ந்த ஒருத்தர், பெரும் புரட்சியெல்லாம் பண்ணி 176000,00,00,000 ரூபாவ (சத்தியமா அது இருநூறு ரூபாவ விட பெரிய தொகைதான்) இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நட்டப்படுத்தி, உலக வரலாற்றுலையே (வெள்ளக்காரன் நம்மகிட்ட தோத்தது இந்த ஒரே ஒரு விசயத்துலதானு சொன்னாங்க) இப்படியொரு புரட்சி நடந்ததில்லை, நடக்கப்போறதில்லைனு சொல்ற மாதிரி ஒரு பிரம்மாண்டப் புரட்சி செஞ்சவருக்கு எதிராத்தான் சத்தியமா ஓட்டுப்போட்டோம்....
அதெப்படிங்க??? 176000,00,00,000 புரட்சிபண்ணிட்டு இருநூறுக்கு வக்கத்த தமிழனுங்க மத்தியில அவரு போட்டியிடலாம்??? எங்களுக்கெல்லாம் அதுல பங்கா தலைக்கு ஒரு இருநூறு குடுத்திருந்தா அவருக்கு போட்டிருக்கமாட்டோமா??? இந்த மாதிரி எங்களுக்குப் பங்கு கொடுக்காம அவரு மறுபடியும் தன் சாதனைய தானே முறியடிச்சுட்டாருனா??? அதனாலதான் அவருக்ககு எதிரா ஓட்டுப்போட்டோம்...
ஓட்டுப்போட்டாச்சு... வீடே பஞ்சத்துல இருந்து விடுபட்டுடுச்சு, இருநூறு வாங்கியாச்சுல!!! இனி பெங்களூருக்கு போகனும்ல... அதுக்கும் ஒரு தனியார் பேருந்துல முன்பதிவு... இப்ப குளு குளுனு குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து... அதுக்கு செலவு 600!! பெங்களூர் போயாச்சு... அங்கயிருந்து தங்கியிருக்க இடத்துக்குப்போக பயனச்செலவு 60... ஆக மொத்த செலவு 400+30+600+60=1090ரூபா... ஆனாப்பாருங்க, 200>1090!!! இதுதான் அவங்க கணக்கு...
ஆனா இருநூறு வாங்கியிருந்தாக்கூட வராத மகிழ்ச்சி, அவரு தோத்துட்டாருனு செய்தி பாத்தப்போ வந்துச்சு... எங்க தொகுதிதான் பாரதத்துக்கு 176000,00,00,000 நட்டப்படுத்துன தொகுதிங்கற அவச்சொல்ல இருநூறுரூபா கூலி வாங்கி இப்ப துடைச்சிருக்கோம்... !!!
No comments:
Post a Comment