சிங்களவர்கள் நமது எதிரிகளாக இருக்கலாம். அதற்காக நம் இனத்தவருடன் இணைந்து வாழும், அவர்களது துன்பத்தில் பங்கேற்கும் சிங்களவர்களையும் எதிர்ப்பது நியாயமற்ற, நம்மை இராசபச்ச போன்றோரின் தரத்திற்கு தாழ்த்தும் செயலாக மாறிவிடும்... அந்த நிலைக்குத் தரந்தாழ்ந்து நாம் செய்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலைகளன்றி வேறேதுமில்லை... வெற்று அரசியல் மட்டுமே செய்ய ஈழத்தைக் கைகளில் எடுத்திருக்கும் சிலருக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் செய்பவர்களுக்கும் வித்தியாசமில்லை... அப்படி ஈழத்தை தங்களுக்கு சோறிடும்பாத்திரமாக எண்ணிக்கொண்டிருப்பவர்களை அடையாளங்கண்டு ஒதுக்கிவைப்பது நமது கடமை...
இன்றும் ஈழத்தமிழர்கள் எதிரியின் பிடியிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கு முதலில் சுதந்திரத்தை வாங்கித்தருவது நமது கடமை. அதனினும் முதன்மையானது அவர்களுக்கு சமகால இலங்கைக்குள்ளாக நண்பர்களை உருவாக்கிக் கொடுப்பது. அதன் முதல் படியாக இலங்கையின் அரச பயங்கரவாதத்தை எதிர்பவர்களுடனும், தமிழர் நலனில் அக்கரை கொண்ட, தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் சிங்களவர்களுடனும் நாம் இணைந்து செயல்படவேண்டும்... எதிரிகளை அழிப்பதை விட முதலில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முனையவேண்டும்... எதிரியை வீழ்த்தும் பயணத்தில் எடுத்து வைக்கவேண்டிய முதல்படி, அவனது செயல்களைக்கண்டு வருந்தும் அவனது உறவினர்களை நமது நண்பர்களாக்கிக்கொள்வதே... இலங்கையின் மீதான படையெடுப்பின் முன் இராவனனின் செயல்களுக்கு வருந்திக் கொண்டிருந்த விபீடணனை நண்பனாக்கிக் கொண்டதைப் போல (எடுத்துக்காட்டு அவ்வளவே. இராவணனை தமிழர் என்ற அடையாளத்தில் காண்பவர்கள் பொறுத்தருளவும்).
சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சிங்களர் இயக்கிய படமான With you, Without You திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரிகளில் படிக்கக் கிடைக்கிறது.
No comments:
Post a Comment