Friday, 1 May 2015

என்னசெய்து உணர்த்துவேன் என்னிதயத்தை!

என்னசெய்து  உணர்த்துவேன் என்னிதயத்தை!
என்னை தினம் பார்க்கும் விண்
மீன்கள் சொல்லலாம் - காரணமில்லா
காதல் என்னுடையதென்று!!!

எப்படிச்சொல்வேன் உன்னையே தேடியோடும் நினைவுகளை!!!
அலையலையாய் எங்கும் மணல் தேடும்
கடல் சொல்லலாம் - உன்னைத் தவிர
ஏதும் கேட்காத காதல் என்னுடையதென்று!!!

என்னவென்பேன் நான் கொண்ட காதலை!!!
காற்றுவடிவாகியும் உள்ளே மழையாய் வாழும்
மேகம் சொல்லலாம் - உன்னிலிருக்கும்
நீதான் என் காதலென்பதை!!!

என் தனிமைக்காக காதல் செய்யவில்லை!!!
பாலையில் சோலை வளர்க்க நீர்தேடும்
விதை சொல்லலாம் - ஒரு உலகம்
படைக்கவே என்
காதலென்று!!!

No comments:

Post a Comment