இலவசங்களுக்கு பதில் வருடத்துக்கு இரண்டு கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டம் என அடுத்த பத்து வருடங்களில் ஒரு நாளைக்கு தலா ஐம்பது கோடி லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இருபது புதிய திட்டங்களை செயல்படுத்துவோம்... பத்து வருடங்கள் கழித்து நம்மால் நாளுக்கு ஆயிரம் கோடி லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்யமுடியும்... அதாவது ஒரு நாளுக்கு 0.33 டிஎம்சி தண்ணீர்... ஒரு வருடத்துக்கு குறைந்தது நூறு டிஎம்சி தண்ணீர்...
விவசாயத்தை இயந்திரமயமாக்கியும் குறைந்த நீர் தேவைப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், பரம்பரிய நீர்நிலைகளைப் மீட்டெடுத்து பராமரித்தும் நீர் மேலாண்மையையும் வேளாண்மையையும் இந்த பத்து வருடங்களில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்...
இருபது வருடங்களில் மழை பொய்த்தாலும் காவிரி வரண்டாலும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் முப்போகம் விளைவிக்குமளவு ஒரு கனவுத் திட்டமாக இதைச் செயல்படுத்தவேண்டும்...
இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் கல்லணை கட்டியதையும் ஆயிரம் வருடங்களுக்குமுன் ஏரிகள் வெட்டியதையும் இன்று நினைத்து நாம் மெய்சிலிர்ப்பதுபோல், நம் சந்ததிகள் நம் தலைமுறையில் நாம் சாதித்ததை நினைத்து மெய்சிலிர்க்கவேண்டும்...
No comments:
Post a Comment