Friday, 1 May 2015

காதல்

ஆயிரம் பேரிடம் தலா ஆயிரம் வார்த்தை பேசிவந்தாலும்,

உன்னைப் பார்த்தவுடன் வாயடைத்துப் போகிறேன்!!!

கனவா இல்லை நினைவா என்று புரிவதில்லை உன்னுடனான சந்திப்புகள்!!!

*******

நீ இன்று மஞ்சளாடை அணிந்திருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன்!!!

வெள்ளை மட்டும் உடுத்திய தேவதைகளை

மஞ்சள் சுடிதாரில் பார்த்தபோது!!!

*******

உன்னை நினைத்தபடி,

பட்டாம்பூச்சிகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தேன்,

மலர்கள் எப்படியிருக்குமென்று!!!

மலரை வரைக. என்ற கேள்விக்கு,

பரிட்சையில் அவை உன் முகம் வரைந்திருந்தன!!!

********

காலகாலமாக நிலவைப் பிடிக்கக்
குதித்துக் கொண்டிருந்ததாம் கடல்,

நீ கால் நனைத்ததும்

அலைகள் ஓய்ந்துவிட்டன!!!

********

தடக் !!! தடக்!!!

தடக்!!! தடக்!!!

என் இதயத்துடிப்பைக் கேட்ட மருத்துவர் திடுக்கிட்டார்!!!

இதுபோன்று அறிவியலிலேயே இல்லை என்றார்!!!

அவள் போகும் இரயில்வண்டியோடு அதுவும் போய்விட!!!

பாவம் அறிவியல்தான் என்ன செய்யும்!!!

********

என் கண்களிடையே போட்டியாம்!!!

அவளை முதலில் காண்பது யாரென்று!!!

அவள் குரல் கேட்டது

நீயா நானா என்ற பங்காளிச் சண்டையால்

செவிகளிடையேயும் ஒரு முரண்,

இதயம் ஒன்றாக மட்டும் இருப்பதால் தப்பித்தேன்!!!

********

கார்த்திகை மாதம் நான் கண்ட கனவில்!!!

தீபங்களின் நடுவே நிலா வந்தது!!!

நிலவல்ல, அப்பேரெழில் நீயென்று கண்டேன்,

பின்னொரு நாளில்

தீபங்களின் நடுவில் நீ வந்தபோது!!!

********

நீ போகும் இடமெல்லாம்

உன்னை வரவேற்க்க மலர்கள் வருவதால்

இந்த உலகம் ஆனது மலர்க்காடு!!!

மலர்களின் தேவதை நீ!!!

*******

அவளைப் பார்த்த பின்பு

அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!!

என்ன செய்ய???

மின்னலைப் பார்த்த கண்களுக்கு வேறு யாரும் தெரிவதில்லை!!!

*******

No comments:

Post a Comment