ஆயிரம் பேரிடம் தலா ஆயிரம் வார்த்தை பேசிவந்தாலும்,
உன்னைப் பார்த்தவுடன் வாயடைத்துப் போகிறேன்!!!
கனவா இல்லை நினைவா என்று புரிவதில்லை உன்னுடனான சந்திப்புகள்!!!
*******
நீ இன்று மஞ்சளாடை அணிந்திருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன்!!!
வெள்ளை மட்டும் உடுத்திய தேவதைகளை
மஞ்சள் சுடிதாரில் பார்த்தபோது!!!
*******
உன்னை நினைத்தபடி,
பட்டாம்பூச்சிகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தேன்,
மலர்கள் எப்படியிருக்குமென்று!!!
மலரை வரைக. என்ற கேள்விக்கு,
பரிட்சையில் அவை உன் முகம் வரைந்திருந்தன!!!
********
காலகாலமாக நிலவைப் பிடிக்கக்
குதித்துக் கொண்டிருந்ததாம் கடல்,
நீ கால் நனைத்ததும்
அலைகள் ஓய்ந்துவிட்டன!!!
********
தடக் !!! தடக்!!!
தடக்!!! தடக்!!!
என் இதயத்துடிப்பைக் கேட்ட மருத்துவர் திடுக்கிட்டார்!!!
இதுபோன்று அறிவியலிலேயே இல்லை என்றார்!!!
அவள் போகும் இரயில்வண்டியோடு அதுவும் போய்விட!!!
பாவம் அறிவியல்தான் என்ன செய்யும்!!!
********
என் கண்களிடையே போட்டியாம்!!!
அவளை முதலில் காண்பது யாரென்று!!!
அவள் குரல் கேட்டது
நீயா நானா என்ற பங்காளிச் சண்டையால்
செவிகளிடையேயும் ஒரு முரண்,
இதயம் ஒன்றாக மட்டும் இருப்பதால் தப்பித்தேன்!!!
********
கார்த்திகை மாதம் நான் கண்ட கனவில்!!!
தீபங்களின் நடுவே நிலா வந்தது!!!
நிலவல்ல, அப்பேரெழில் நீயென்று கண்டேன்,
பின்னொரு நாளில்
தீபங்களின் நடுவில் நீ வந்தபோது!!!
********
நீ போகும் இடமெல்லாம்
உன்னை வரவேற்க்க மலர்கள் வருவதால்
இந்த உலகம் ஆனது மலர்க்காடு!!!
மலர்களின் தேவதை நீ!!!
*******
அவளைப் பார்த்த பின்பு
அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!!
என்ன செய்ய???
மின்னலைப் பார்த்த கண்களுக்கு வேறு யாரும் தெரிவதில்லை!!!
*******
No comments:
Post a Comment