உன்னிடம் என் காதலைச் சொல்லிடும் ஒவ்வொரு முறையும் நீ புரிந்தும் புரியாததுபோல் காட்டிக்கொள்கிறாய்.
நண்பனாகவே இரு என்று நீ சொல்லும் ஒவ்வொருமுறையும் உனக்கு தோள் கொடுத்தே நின்றிருக்கிறேன்.. தோழமை காதலாக மாறிடும் என்பது நீயும் அறியாததல்ல...
மனதில் கரைபுரண்டோடும் காதலை உன்னிடமும் சொல்லாது, உணர்ச்சிகளற்று மரமாக அடங்கி நிற்க நான்படும் பாடு எதிரியும் படக்கூடாத துன்பம்.
உன் கைகோர்த்து நடப்பதை ஆயிரம் இரவுகளில் கனவாக கண்டிருக்கிறேன். உன்னோடு இணையாக நடக்கும் வாய்ப்பு கிடைத்த அந்த சில பொழுதுகளிலும் என் கைகளைக் கட்டியே வைத்திருந்தேன். என் கைகள் உன் கைகளைத் தீண்டியவுடன் என் காதல் வெளிப்பட்டுவிடும் என்பதால்.
அருகில் நீயிருக்கும் சில பொழுதுகளிலாவது உன்னைப் பார்க்கவாவது முடிகிறதென்று ஆறுதல் செய்து கொள்வேன். மின்னலாக சிலநொடிகள் மின்னிவிட்டு நீ மறைந்தும் விடுகிறாய். நீயில்லாதுபோகும் அந்த ஆயிரமாயிரம் பொழுதுகளில் என் செய்வேன்? கனவுகள் மட்டுமில்லாது போயிருந்தால் காதலால் வெடித்துச் சிதறியிருப்பேன்.
உன்னை என்னில் வைத்துக் காத்திருக்கிறேன். தோழி, காதலில் தோழமையும் உண்டு.
-காதலன்.
No comments:
Post a Comment